கைது செய்யப்பட்டு காணாமற்போன லலித் மற்றும் குகன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இந்த போராட்டம் இன்று முன்னிலை சோஷலிச கட்சியினால் நடத்தப்பட்டுள்ளது.
“தருவதாக கூறிய ஜனநாயகம் எங்கே?”, லலித், குகன் ஆகியோரை விடுதலை செய் உள்ளிட்ட வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
லலித், குகன் ஆகியோர் காணாமல்போய் இற்றைக்கு மூன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள் குறித்த எவ்வித தகவல்களும் இதுவரை வெளிக்கொணரப்படவில்லை.
அவர்கள் மாத்திரமல்லாது, கடத்தப்பட்டவர்கள், காணாமற் போனவர்கள் ஆகியோருக்கு நடந்தது என்ன, என்பது தொடர்பிலும் அரசாங்கம் இதுவரை எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை.
வெறுமனே விசாரணைகளை மாத்திரம் நடத்தி வருகின்றதே தவிர, காணாமல் போனவர்களை அவர்களின் உறவினர்கள் இதுவரை கண்ணிலும் காணவில்லை, குறைந்த பட்சம் அவர்களது குரலை கூட கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் துண்டு பிரசுரங்களையும் பொது மக்களிடம் வழங்கினர்.
No comments
Post a Comment