ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவளித்த குற்றச்சாட்டில் 9 வயது சிறுவன் ஒருவன் எதிர் போராளி குழுவொன்றால் கொடூரமான முறையில் படு கொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் புதிய வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ காட்சி ஈராக்கிய திக்றித் நகரில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட சிறுவனை ஆயுததாரிகள் சூழ்ந்து நிற்க அவர்களில் ஒருவர், ''நீ எங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லையா?'' என சிறுவனிடம் வினவுகிறார்.
இதன்போது சிறு வன், ''நான் கடவுள் ஆணையாக உங்கள் மீது ஒரு துப்பாக்கி ரவையைக் கூட சுட வில்லை'' என்று கூறுகின்றான்.
இதனையடுத்து சிறுவன் கெஞ்சி அழுவதை பொருட்படுத்தாது ஆயுததாரிகள் அவன் மீது தன்னியக்க துப்பாக் கியால் பல தடவைகள் சுடுகின்றனர்.
துப்பாக்கி ரவை கள் சிறுவனின் தலையில் பாயவும் அவன் உடனடியாக இறந்து விழுகின்றான்.
தற்போது திக்றித் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக 30,000 ஈராக்கிய படை வீரர்களும் ஷியா போராளிகளும் தாக்குதல் நடவ டிக்கையை ஆரம் பித்துள்ள நிலையில் இந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரா டும் உள்ளூர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடு குறித்து கேள்வி எழுப்புவதாகவுள்ள இந்த வீடியோ காட்சியின் உண்மைத்தன்மை குறித்து உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக கூறப்படுகிறது
Social Buttons