![]() |
TGTE |
இலங்கைத் தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள SRI LANKA : HIDING THE ELEPHANT எனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வு பிரான்சில் இடம்பெறுகின்றது.
சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவரும் பேராசிரியரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான இராமு.மணிவண்ணன் அவர்களால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது.
சாட்சியங்கள், ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள், ஒளிப்படங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் 900 பக்கங்களுக்கு மேல் கொண்டுள்ளது.
பிரான்சில் இடம்பெறவுள்ள நிகழ்வரங்கில் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் நேரடியாக வருகைதர இருப்பதோடு, தமிழகமும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் எனும் கருப்பொருளில் கருத்தாடலொன்றினையும் நடாத்துகின்றார்.
இந்நிகழ்வு தலைநகர் பாரிசில் மார்ச் 22ம் நாள், 363bis Rue des Pyrenes, 75020 Paris / Metro : Jourdain - Ligne : 11 எனும் இடத்தில் மாலை 16h00 மணிக்கு இடம்பெறுகின்றது.
Social Buttons