Latest News

February 25, 2015

பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் !
by Unknown - 0

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதையடுத்து பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றம் ஏப்ரல் 23ஆம் திகதி வியாழக்கிழமை கலைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளது. இதனையடுத்தே பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற செயலமர்வின் போது தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
« PREV
NEXT »