Latest News

February 18, 2015

மஹிந்த இன்றைய கூட்டத்துக்கு வராவிடின் இலட்சக்கணக்கான மக்களுடன் அவரிடம் செல்வோம்
by admin - 0

இலங்­கையின் தைரி­ய­மான தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வே­யாகும். மஹிந்த என்­பது பெயர் அல்ல. அது ஒரு நாடு. மேலும் 58 இலட்சம் மக்­களின் விருப்பை வெற்றி பெற செய்யும் நோக்­குடன் இன்று இடம்­பெ­ற­வி­ருக்கும் பொதுக்­கூட்­டத்­திற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வருகை தரா­விடின் இலட்­சக்­க­ணக்­கான மக்­க­ளுடன் மெத­மு­ல­ன­விற்கு செல்வோம் என தாய் நாட்­டிற்­கான கலைஞர் அமைப்பு சூளு­ரைத்­தது.
மேலும் தற்­போது நாட்டின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. நாம் முன்பு எச்­ச­ரிக்கை விடுத்­ததை போன்று வட­மா­காண செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கி­றது. முஸ்லிம் பயங்­க­ர­வாத அமைப்­புக்­களின் கையும் ஓங்­கி­யுள்­ளது. இவற்­றி­லி­ருந்து நாட்டை பாது­காக்க கூடிய ஒரே தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவேயாவார். அவ­ரையே பிர­தம வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்டும் எனவும் அவ்­வ­மைப்பு கோரி­யது.
தாய்­நாட்­டுக்­கான கலைஞர் அமைப்பின் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு நேற்று முன்தினம் தேசிய நூல­கத்தில் இடம்­பெற்ற போதே அவ்­வ­மைப்பின் ஏற்­பாட்­டாளர் மது­மா­தவ அர­விந்த இதனை தெரி­வித்தார்.
அவர் மேலும் கூறு­கையில்,
தற்­போது நாட்டின் தலைவர் யார் என்­பது இது­வரை தெரி­யாமல் உள்­ளது. குழப்­ப­க­ர­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. நாட்டு மக்­களை பொய்­யான வார்த்தைகளை கூறி ஏமாற்றி வரு­கின்­றனர்.
இது­வரை ராஜ­பக் ஷ பெய­ரு­டைய எவ­ரையும் கைது செய்­ய­வில்லை. இவை­ய­னைத்தும் அர­சாங்­கத்தின் ஏமாற்று வித்­தை­யாகும்.
எந்த அர­சாங்­கத்­திலும் ஊழல் மோச­டி­யற்­ற­வர்கள் இல்­லாமல் இருக்க முடி­யாது. நடந்து முடிந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை போன்று முன்னர் அர­சாங்­கத்தின் மோச­டிக்­கா­ரர்­களை தண்­டிப்­ப­தாக கூறினர்.
எனினும் அவ்­வாறு இடம்­பெ­ற­வில்லை. எனவே இந்த அர­சாங்கம் மக்­களை ஏமாற்­று­வ­தி­லேயே குறி­யாக உள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவினால் பல தவ­றுகள் இடம்­பெற்­றி­ருக்­கலாம். அத்­த­கைய தவ­றுகள் இடம்­பெற்ற போது அதனை விமர்­சித்­துள்ளோம். எவ்­வா­றா­யினும் 30 வருட கால யுத்தத்தை முடி­வுக்கு கொண்டு வந்து இன­வா­தத்தை தூக்கி எறிந்து விட்டு நாட்டில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தி­யவர் மஹிந்த ராஜ­பக் ஷ ஆவார். சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு அஞ்­சாது தைரி­ய­மாக செயற்­பட்டு அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுத்தவர் இந்­நி­லையில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது பல எச்­ச­ரிக்­கை­களை விடு த்தோம். இதன் போது எம்மை இன­வா­திகள் என சித்­த­ரித்­தனர். எனினும் எமது எச்­ச­ரிக்கை கணிப்­புகள் ஒவ்­வொன்றும் நாட்டில் இடம்­பெற்று வரு­கின்­றது.
நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வகையில் வட­மா­காண சபை தீர்­மானம் நிறை­வேற்றி இருக்­கி­றது. அதே­போன்று முஸ்லிம் அடிப்­படை வாதி­க­ளான வஹா­பி­களின் செயற்­பாடு அதி­க­ரித்­துள்­ளது. மேலும் மேலைத்­தேய நாடு­களின் ஆக்­கி­ர­மிப்பும் நாட்டில் ஏற்­பட்­டுள்­ளது.
எனவே இவ்­வா­றான பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­களை நிவர்த்தி செய்ய மஹிந்த ராஜ­பக் ஷவே தகு­தி­யா­னவர். அவ­ரையே ஐ.ம.சு.மு.வின் பிர­தமர் வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்டும். சு.கட்­சியை பிள­வு­ப­டுத்­து­வது எமது நோக்­க­மல்ல.
நாட்­டையும் சுதந்திரக் கட்­சி­யையும் பாது­காப்­பதே எமது இலக்­காகும். தற்­போது நாட்டில் சட்­ட­வி­ரோ­த­மான பிர­தமர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எனவே இவ்­வா­றான கெடு­பி­டி­க­ளுக்கு முடிவு கட்ட வேண்டும். இந்­நி­லையில் இன்று புதன்­கி­ழமை மஹிந்த ராஜ­ப­க் ஷ­விற்கு ஆத­ர­ வான பொது கூட்­டத்­திற்கு பெருந்­தி­ர­ளான மக்கள் கலந்து கொள்வர்.
இக் கூட்­டத்­திற்கு மஹிந்த ராஜ­ப­க் ஷவும் கலந்து கொள்வார் என நம்புகிறோம். அக் கூட்டத்திற்கு மஹிந்த ராஜபக் ஷ வருகை தரா விட்டால் நாம் இலட்சக்கணக்கான மக்களுடன் மெத முலனவிலுள்ள அவரது வீட்டிற்கு செல்வோம். பலவந்த மாக அவரை அரசியலுக்குள் கொண்டு வருவோம். அத்தோடு முஸ்லிம் அடிப்படை வாதிகளினாலும் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினாலும் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
« PREV
NEXT »