கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய மூன்று உயர் கடற்படை அதிகாரிகளில் ஒருவர் தற்போது வெளிநாட்டில் பயிற்சி நெறியொன்றில் கலந்து கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள இரண்டு கடற்படை முகாம்களில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும், கப்பம் பெற்றுக் கொண்டதன் பின்னர் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயர் கடற்படை அதிகாரி ஒருவரின் காரியாலயத்தை சோதனையிட்ட போது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் கடவுச்சீட்டுக்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் கடத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் தமிழ் இளைஞர்களை கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தி கொலை செய்தமை தொடர்பில் மிக முக்கியமான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 28 பேரில் 11 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான சகல விபரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களிடமிருந்து கப்பம் பெறும் முகவராக கருணாவே செயற்பட்டுள்ளார்.
No comments
Post a Comment