Latest News

February 21, 2015

யாழ் போராட்டத்தில் சுமத்திரன் எரிக்கப்பட்டார்
by admin - 0

இன்று யாழ்ப்பாண மத்திய பேரூந்து நிலையத்தில் சரணடைந்த மற்றும் காணாமல் போனோரின் உறவினர்களால் கவனயீர்பு போராட்டம் ஒன்று காலை 9.45 மணியளவில் ஆரம்பமாகி 11.30 மணிவரை இடம்பெற்று பின்பு தமிழராட்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களின் நினைவு முற்றம் வரை நகர்ந்து சென்றது. 

இதில் 'குற்றவாளிகளே நீதிபதிகளா? 'சர்வதேச விசாரணை வேண்டும்' உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை' 
'தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுதலை செய்' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிமேசந்திரன் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரும் மேலும் பல அரசியல் வாதிகளும் பாதிக்கப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர். இறுதியாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.


« PREV
NEXT »

No comments