Latest News

February 03, 2015

5 மாணவர்கள் கடத்தலுடன் கடற்படையை சேர்ந்த சம்பத் முனசிங்கவுக்கு தொடர்பு கொழும்பு புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சாட்­சியம்
by admin - 0

மாணவர் கடத்­தலில் கடற்­ப­டையைச் சேர்ந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க தொடர்­பு­பட்­டுள்­ள­மைக்கு சான்­றுகள் உண்டு என்று ஐந்து மாண­வர்கள் கடத்­தப்­பட்ட வழக்கில் சாட்­சி­ய­ம­ளித்த கொழும்பு புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி ரஞ்சித் முன­சிங்க தனது சாட்­சி­யத்தில் தெரி­வித்தார்.
2008 ஆம் ஆண்டு தெஹி­வ­ளையில் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­களின் ஆட்­கொ­ணர்வு மனு விசா­ர­ணையில் மனு­தா­ரர்­களின் சார்பில் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா கொழும்பு புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யான ரஞ்சித் முன­சிங்­கவின் சாட்­சி­யத்தை நெறிப்­ப­டுத்­திய போதே அவர் இவ்­வாறு கூறினார்.
தெஹி­வ­ளையில் 2008 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் மூன்று தமிழ் இளை­ஞர்­களும் அவர்­க­ளது நண்­பர்­க­ளான இரண்டு முஸ்லிம் இளை­ஞர்­களும் பயணம் செய்த வாக­னத்­தோடு கடத்­தப்­பட்­டனர்.
கடத்­தப்­பட்டு காணா­மல்­போன மாண­வர்­களின் பெற்­றோர்­களை மனு­தா­ரர்­க­ளாக பெயர் குறிப்­பிட்டு சிரேஷ்ட சட்­டத்­த­ரணி திரு­மதி கௌரி சங்­கரி தவ­ராசா தாக்கல் செய்த ஆட்­கொ­ணர்வு மனுக்கள் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் விசா­ரிக்­கப்­பட்ட வேளையில் சாட்­சி­களை விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்­றத்­திற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்­தது.
மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் ஐந்து இளை­ஞர்­களில் கடத்­தப்­பட்ட மாணவன் ராஜீவ் நாக­நாதனின் தாயார் சரோஜா நாக­நா­தனும் கடத்­தப்­பட்ட மாணவன் பிரதீப் விஸ்­வ­நாதன் சார்பில் அவ­ரது தந்­தையார் விஸ்­வ­நா­தனும் கடத்­தப்­பட்ட மாண­வ­னான தில­கேஸ்­வரன் ராம­லிங்கம் சார்பில் அவ­ரது தாயார் காவேரி ராம­லிங்­கமும் குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்­றி­ய­வரும் தற்­பொ­ழுது உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ராக கட­மை­யாற்­று­ப­வ­ரு­மான எம்.ஏ. ஜய­தி­லக­வும் ­க­டந்த தவ­ணை­களில் கொழும்பு நீதிவான் நீதி­மன்றில் சாட்­சியம் அளித்­தி­ருந்த நிலையில் கொழும்பு புல­னாய்வுப் பிரிவின் விசேட விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யான ரஞ்சித் முன­சிங்க தனது சாட்­சி­யத்தில்
முன்னாள் கடற்­படைத் தளபதியும் தற்போது ஜப்பான் நாட்டின் தூது­வ­ரு­மான அட்மிரல் வசந்த கரன்­னகொட கடற்­ப­டையின் லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்க தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் சேர்ந்து செயல்­ப­டு­கின்றார் என பொலிஸ் மாஅ­தி­ப­ருக்கு 2009ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் திகதி செய்த முறைப்­பாட்­டினை விசா­ரணை செய்­கையில் கடற்­ப­டையைச் சேர்ந்த லெப்­டினண்ட் கமாண்டர் சம்பத் முன­சிங்­க­விற்கு தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் எந்­த­விதத் தொடர்பும் இல்­லை­யெ­னவும் தெஹி­வ­ளையில் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­களின் கடத்தல் சம்­ப­வத்தில் தொடர்­பு­பட்­டுள்­ள­மைக்கு சான்­றுகள் உள்­ள­ன­.
கொழும்புக் கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரி­வினரால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் சந்­தேக நப­ரான கடற்­ப­டையைச் சேர்ந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வினால் பாவிக்­கப்­பட்ட அறை­யி­லி­ருந்து முன்னாள் கடற்­படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்­ன கொ­டயின் அடை­யாள அட்டை, வெடி குண்­டுகள் கொமர்ஷல், சம்பத், இலங்கை வங்­கி­களின் சேமிப்புப் புத்­த­கங்கள், காசோ­லைகள், காணாமல் போன­வர்­களின் தேசிய அடை­யாள அட்­டைகள், காணாமல் போன­வர்­களின் கட­வுச்­சீட்­டுக்கள், சோனி எரிக்சன் சிம்­அட்­டைகள் உட்­பட 21 தடயப் பொருட்­களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் கைப்­பற்றி பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்­க­மைய கொழும்பு புல­னாய்வுப் பிரி­வி­னரிடம் ஒப்படைத்­த­தை­ய­டுத்து மேல­திக விசா­ர­ணை­களை தாங்கள் நடாத்தி விசா­ரணை அறிக்­கை­களை கொழும்புக் கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­துள்­ள­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.
தெஹி­வ­ளையில் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­களும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்­களா-? என்ற சந்­தே­கத்தில் விசா­ர­ணை­களை நடத்­தி­ய­தாக பொறுப்­ப­தி­காரி ரஞ்சித் முன­சிங்க சாட்­சி­ய­ம­ளித்த பொழுது சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா சாட்­சி­யிடம் கடத்­தப்­பட்ட ஐந்து மாண­வர்­க­ளுக்கும் தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுடன் தொடர்பு உண்­டென சான்­றுகள் உண்டா என வின­வி­ய­போது ஐந்து மாண­வர்­க­ளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென சாட்சியமளித்தார்
மனுதாரர்கள். சார்பில் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவின் அனுசரணையில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா ஆஜராகியதுடன் பிரதிவாதிகளுக்காக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சவீந்திர பெர்னாண்டோ ஆஜரானார் .
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேலதிக விசாரணையை பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
« PREV
NEXT »