Latest News

January 20, 2015

யாழில் சிறுவா் இல்லதை விட்டு வெளியேறியவா்களை பாலியல்துஸ்பிரயோகம் செய்ததாகஒருவர் கைது
by admin - 0

யாழ் நாயன்மார்கட்டில் உள்ள எஸ்ஓ.எஸ் சிறுவா் இல்லத்தில் கணக்கு பதியுனராக வேலை செய்யும் யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சோ்ந்த துரைராஜா தனுசன் அங்கு  சிறுமிகளாகத் தங்கியிருந்து வெளியேறிய  சிலரைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக  யாழ் பொலிஸ்நிலையத்தின் பெண்கள் சிறுவா்களுக்கான பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து  2014ம் ஆண்டு காலப்பகுதி வரை  குறித்த சிறுவா் இல்லத்தில்  தங்கியிருந்து வெளியேறியவா்களை அரியாலைப்  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அறையிளை  வாடைகைக்கு எடுத்து  அவா்களை அங்கு வைத்து  வைத்து துஸ்பிரயோகப்படுத்தியுள்ளதாகவும் முறைப்பாட்டில் பதியப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த சிறுவா் இல்லத்தில் தங்கியிருப்பவா்களையும் குறித்த நபா் பாலியல்துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினரா என்பது பற்றியும் விசாரணைகளைப் பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதே வேளை  குறித்த பாலியல்துஸ்பிரயோகம் பற்றிய தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்த சுயாதீனஊடகவியலாளருக்கு  துரைராசாக்கு  தனுசன் கொலை  அச்சுறுத்தல் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தனுசனைக் கோப்பாய் பொலிசார் கைது செய்து விசாரணைகள் செய்து வருகின்றனா்.

« PREV
NEXT »