Latest News

January 16, 2015

ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது ஈழத் தமிழினம்!-
by admin - 0

'திருப்பதி வந்தால் திருப்பம் நேரும்’ என்பார்கள். திருப்பதி வந்து போனவருக்கு நேர்ந்த திருப்பமோ, திடுக்கிடவைத்தது. ராஜபக்ஷவின் வலது கையைப் பார்த்தால் தெரியும்... கலர் கலரா கக் கயிறுகள் கட்டியிருப்பார். யார் ஜோசியம் சொன்னாலும் கேட்டுக் கொள்வார்.

உடல் நலிவுற்ற நேர த்தில்   24 மணி நேரமும் குடும்ப மருத்துவரை தனது பார்வை யிலேயே வைத்துக் கொள்வதைப் போல, ஆஸ்தான ஜோதிடர் தேச பந்து சுமனதாச அபேருணவர்த் தனவை எப்போதும் தன் பக்கத் திலேயே வைத்திருந்தார்.

'இலங்கையில் 8 ஆம் திகதி தேர்தல் வை’ என்றது கூட தேசப ந்து குறித்துக்கொடுத்ததுதான். ஜனவரி 8 இல் தேர்தல் என்றால், டிசெம்பர் 8 இல் வேட்புமனு தாக் கல் செய்தார் ராஜபக்ஷ. அவர் முதன்முதலாக (2005 இல்) ஜனா திபதி ஆனது நவம்பர் 17... கூட்டுத் தொகை 8. இரண்டாவது முறை (2010 இல்) தேர்தல் நடந்த நாள் ஜனவரி 26... கூட்டுத்தொகை 8. அதற்கான வேட்புமனுவை டிசெம் பர் 17 தாக்கல் செய்தார்... கூட்டுத் தொகை 8. ராஜபக்ஷ முதன்முத லாக (2004 இல்) பிரதமரானது ஏப்ரல் 8. இதையெல்லாம் சுட்டிக் காட்டிய தேசபந்து, '8 ஆம் இலக் கம்தான் உங்களுக்கு இராசி. சிலருக்கு அதிர்ஷ்டம் எப்போதாவது தான் வரும்.

ஆனால், உங்களை அதிர்ஷ் டம் தான் இயக்கிக் கொண்டிருக் கிறது. மூன்றாவது முறை மட்டும் அல்ல, நான்காவது முறையும் நீங்கள்தான் ஜனாதிபதி’ எனக் குறித்துக்கொடுத்தார்.

சரியாக 10.20 மணிக்கு வேட்புமனு கொடு க்கச் சொன்னார்கள்... கொடுத் தார். இடது கையால் தரச் சொன் னார்கள்... (இடது கையால் தரும் போது நிற்கும், பார்க்கும் திசை நல்லது! - தேசபந்து பாதை!) ராஜபக்ஷ தந்தார். உலக நாடுகள் ஆதரித்தாலும், மோடியே வாழ்த் துச் சொன்னாலும் \'நாங்கள் மூன்றாவது முறையும் ஏமாற மாட்டோம்’ என்பதை இலங்கை மக்கள் காட்டிவிட்டார்கள்.

\'வயிற்றில் குத்துவதுபோல வந்து முகத்தில் குத்த வேண்டும்’ என  ஜே.ஆர். ஜெயவர்த்தனதான் சொன்னார்... \'எந்த மக்களையும் இரண்டு முறைக்கு மேல் நம்பக் கூடாது. மூன்றாவது முறை கவி ழ்த்துவிடுவார்கள்.’

ஜே.ஆர்.ஜெ-விடம்   அரசியல் பாடம் படிக்காததன் விளைவே, இந்தத் தோல்வி. இதை ராஜபக்ஷ எதிர்பார்க்கவில்லை. தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தனது அலரிமாளிகைக்கு ஊடகவியலா ளர்களை அழைத்துப் பேசினார்.

\'உங்களுக்குப் போட்டி கடுமை யாக இருக்கிறதே?’ எனத் தைரி யமாக ஒருவர் கேட்டார். 'உண்மையில் போட்டி என எதுவுமே கிடையாது. அப்படியான போட்டி இருப்பதாக எனக்குத் தெரியவி ல்லை.

கொழும்பு வந்தால் மட்டுமே என்னைச் சுற்றி இருப்பவர்கள் போட்டி இருப்பதாகச் சொல்கிறார் கள். கிராமப் பகுதியில் அப்படி எதுவும் இல்லை’ என ராஜபக்ஷ சொன்னார். அவரும் அப்படித்தான் நம்பினார்.

தமிழர்கள் தனக்கு வாக்குப் போட மாட்டார்கள் என ஒப்புக்கொ ண்டார். \'கடந்த தேர்தலில், 46 ஆயிரம் தமிழர்கள்தான் எனக்கு வாக்கு அளித்தார்கள். ஆனால், இப்போது அதிகமான வாக்குகள் கிடைக்கும்’ என எதிர்பார்த்தார். ஆம், அது நடந்துள்ளது.

யாழ்ப்பா ணம், வன்னி, மட்டக்களப்பு மாவட் டங்களில் கடந்த தேர்தலைவிடக் கூடுதலாக தமிழர்கள் ராஜபக்ஷ வுக்கு வாக்கு அளித்துள்ளனர். அவரே சொன்னது மாதிரி, தெரி யாத தேவதையைவிடத் தெரிந்த பிசாசே மேல் என நம்பியவர்களும் உண்டு.

ஆனால், வேட்டு முறையை விட ஓட்டு முறையில் பாடம் புகட்ட லாம் என தமிழர்கள் நினைத்தது தான் இந்த முடிவுக்குக் காரணம் எனத் தேர்தல் முடிவுகளை அலசினால் புரிகிறது. தமிழர்களில் 9,78,111 பேர் மைத்திரிபால சிறிசே னவுக்கு வாக்கு அளித்துள்ளனர். ராஜ பக்ஷவுக்குக் கிடைத்திருப்பதோ 3,23,600. சுமார் 6.54 இலட்சம் தமிழர்களின் வாக்குகளைக் கூடுத லாகப் பெற்றிருக்கிறார் சிறிசேன.

மொத்த இலங்கைக்கும் சேர்த் துப் பார்த்தால், சிறிசேன 62,17,162 வாக்குகளும், ராஜபக்ஷ 57,68, 090 வாக்குகளும் பெற்றுள்ளனர். சுமார் 4.49 இலட்சம் வாக்குகள் தான் வெற்றி வித்தியாசம். ஆக, தமிழர்களின் வாக்கு சிறிசேன வுக்கு விழாமல் போயிருந்தால், ராஜபக்ஷ மீண்டும் வெற்றி பெற்றி ருக்கக்கூடும்.

மூன்றாவது முறையும் ராஜப க்ஷ வென்றால், அவர் இதுவரை நடத்திய இழப்புகளுக்கும் ஒட்டுமொ த்த இலங்கையும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகப் பொருள் ஆகிவி டும். உலக நாடுகளைத் திசைதி ருப்ப இது ஒன்றே போதும். அத னால்தான் வெற்றிக்குத் துடித்தார் ராஜபக்ஷ.

கொலை செய்யப்பட்ட தமிழர்களது புகைப்படங்களை, வீடியோக்களை நாம் பார்த்துக்கொ ண்டிருக்கிறோம் அல்லவா?! அதே போல இந்தப் போரில் மரணம் அடைந்த சிங்கள இராணுவத்தி னரின் புகைப்படங்களை, வீடியோ க்களைச் சேகரித்து சிங்களக் கிராமங்களில் நித்தமும் கொண்டு போய்க் காட்டிச் சொன்னார் ராஜப க்ஷ. \'பாருங்கள்... எத்தனை ஆயி ரம் சிங்கள வீரர்களை புலிகள் கொன்றிருக்கிறார்கள்.

அவர்க ளைத்தான் நான் அழித்தேன். என்னை அழிக்க அமெரிக்காவும் இந்தியாவும் ஐரோப்பாவும் துடிக் கின்றன. நீங்கள்தான் என்னை ஆதரிக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் பாது காப்பாக இருக்க வேண்டுமானால், என்னை ஆதரியுங்கள்’ என வெறி கிளப்பிவிட்டார்.

ஏழை சிங்கள மக்கள் வாழும் கிராமப்புறங்களில் இந்தப் பிரசாரம் நன்கு எடுபட்டது. களுத்துறை, மாத்தளை, மாத் தறை, காலி, அம்பாந்தோட்டை, அநுராதபுரம் உள்ளிட்ட 10 மாவட் டங்களில் ராஜபக்ஷ அதிக வாக்கு களை அள்ளியது அதனால்தான்.

கொழும்பு, கண்டி, கம்பஹா, திருகோணமலை போன்ற மத்திய தர வர்க்கம் கூடுதலாக இருக்கும் மாவட்டங்கள் சிறிசேனவுக்குக் கைகொடுத்தன.

ராஜபக்ஷ வெற்று வாக்குறுதிகளைக் கொடுத்தாரே தவிர, கடந்த 10 ஆண்டுகளில் இலங் கைக்குப் பொருளாதார ரீதியாக எந்த நன்மையும் இல்லை. வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமானது. புதிய திட்டங்கள் இல்லை என்பதை இந்தப் படித்த, மத்தியதர வர்க்க சிங்களர்கள் உணர்ந்தார்கள்.

சிறிசேனவை ரட்சகர் என சிங் கள - தமிழ் மக்கள், மதச் சிறுபான் மையினர், மலையகச் சொந்தங் கள் ஏற்றுக்கொண்டு விட்டனர் என நினைக்கத் தேவையில்லை.

கரு ணாநிதிக்கு மாற்றாக ஜெயலலி தாவும், சோனியாவுக்கு மாற்றாக மோடியும் வந்துவிடுவதைப்போ லத் தான் இதுவும். ஜெயலலிதாவும் மோடியும் சொர்க்கத்தைக்காட்டு வார்கள் என நினைத்து, யாரும் வாக்கு அளிப்பதில்லை.

ஏற்கனவே இருந்தவர் மீதான கோபத்தை, புதிதாக வருபவர் அறுவடை செய்து கொள்கிறார்... அவ்வளவுதான். அது இலங்கையில் சிறிசேனவு க்குக் கிடைத்துள்ளது.

அரசியல் இலக்கு அற்ற வன்மு றைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 40 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்ததன் மூலமாக அரசியலுக்கு வந்தவர் சிறிசேன.

அதன் பின்னர் சந்திரிகா வின் சுதந்திரக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, அவரோடு இருந்தார். கட்சி சந்திரிகாவிடம் இருந்து கை நழுவி ராஜபக்ஷவிடம் வந்தபோது, அவரோடு கைகோத் தார்.

கட்சிக்கு ராஜபக்ஷ தலைவர் என்றால், சிறிசேன பொதுச் செய லாளர். கடந்த 10 ஆண்டுகள் நிலைமை இதுதான். ராஜபக்ஷ அமைச்சர வையில் சுகாதாரத் துறை அமைச் சர்.

2009 ஆம் ஆண்டு இறுதிப் போர் காலகட்ட த்தில் இராணுவ அமைச்சராக இருந்த \'பெருமை’ யும் இவருக்கு உண்டு. ராஜபக்ஷவின் சகோத ரர்களைப் பிடிக் காமல் கடந்த நவம்பரில் அந்தக் கட்சிக்கு முழு க்குப் போட்டுவிட்டு வெளியில் வந்தார் சிறிசேன.

தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்காகக் கூட, தமிழர்களுக்கு மறந்தும் எந்த வாக்குறுதியும் தந்துவிடாதவர்.

ஓர் உதாரணம் - கடந்த வாரத் தில் ஒரு பேட்டியில், பிரபாகரன் பெயரைச் சொல்லும்போது, 'மிஸ் டர் பிரபாகரன்’ எனச் சொல்லி விட்டார் சந்திரிகா.

இதைப் பிடித் துக் கொண்டனர் ராஜபக்ஷ ஆட்கள். \'மிஸ்டர் பிரபாகரன் எனச் சொல்பவர்கள் இலங்கை க்கு எப்படி ஜனாதிபதி ஆக முடி யும்?’ எனக் கிளம்பிவிட்டார்கள். ஆணா, பெண்ணா என்பதைச் சுட்டிக்காட்டச் சொல்லும் அடை யாளம்தான் 'மிஸ்டர்’ என விள க்கம் சொல்லிக்கொண்டே இருந் தார் சந்திரிகா.

சுதந்திரக் கட்சி என்பது சந்திரி காவின் அப்பா ஆரம்பித்தது. தன் குடும்பச் சொத்தை அடுத்தவர் அனுபவிப்பதா என, சந்திரிகா எரிச்சலடையலாம்.

சிங்கள இன வாதக் கட்சியான ஜாதிஹல உறு மயவும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பும் ஒரே ஆற்றில் தண்ணீர் குடிக்கும் அளவுக்கு அகிம்சை தழைக்குமா? சீன ஆதரவாளர் என்பதால், இதுவரை மகிந்தவை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரத் துடித்த அமெரி க்கா, இனி இலங்கை மீது கரி சனம் காட்டும் என்பது என்ன நிச்சயம்? இப்படி ஒரு முட்டுச்சந்தில் மாட்டிக்கொண்டிருக்கிறது ஈழத் தமிழினம்!
ஜுனியர் விகடன்

« PREV
NEXT »