Latest News

January 18, 2015

வடகிழக்கிற்கு சுயாட்சியை வழங்குவதாக நான் கூறவில்லை: ரணில் மறுப்பு
by admin - 0


வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை ஏற்படுத்த இருப்பதாக ரணில் விக்ரமசிங்கவை மேற்கேள்காட்டி இந்தியாவின் இணையத்தளம் நேற்று வெளியிட்ட செய்தியை ரணில் மறுத்துள்ளார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவிருப்பதாக கூறியதை இந்த இணையத்தளம் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 


இலங்கை தொடர்பில் ஐ.நா விசாரணையை நடத்துவதற்காக நிபுணர் குழு ஒன்று நியமித்து விசாரணை நடாத்தி வருகின்றது. 


இந்தக்குழுவுடன் அரசு இணைந்து செயல்படுவதோடு, குற்றத்துக்கான தண்டனையை உள்நாட்டு சட்டதிட்டத்தின்படியே அணுகப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


அத்தோடு சீனா மற்றும் ஏனைய வெளிநாடுகளினால் இலங்கையில் அமுலாக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதோடு மோசடிகள் குறித்து விசாரணை செய்யப்படும் என்றும் கூறினார்.

« PREV
NEXT »

No comments