Latest News

January 07, 2015

மாளிகாவத்தையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டார் !
by Unknown - 0

விஜய செய்தித்தாள் குழுமத்தின் செய்தியாளர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதலின் போது செய்தியாளரின் ஊடக அடையாள அட்டையும் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேளசாத் அமித் என்ற செய்தியாளரே மாளிகாவத்தை பகுதியில் வைத்து தாக்கப்பட்டவராவார். இதேவேளை தாம் தாக்கப்படும்போது நான்கு பொலிஸார் பார்த்துக்கொண்டிருந்தபோதும் அதனை தடுக்கமுனையவில்லை என்று செய்தியாளர் முறையிட்டுள்ளார்.

தாமும் தமது நண்பர் ஒருவரும் கடை ஒன்றுக்கு சென்றிருந்தபோது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவளிக்கும் தமது நண்பரை மூன்று பேர் தாக்கினர். இதன்பின்னர் தாமும் தாக்கப்பட்டதாக செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தாக்குதல் நடத்தியவர்கள் வேன் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாகவும் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தாக்குதலை பார்த்துக்கொண்டிருந்த பொலிஸாரை தாம் ஏன் தாக்குதல் நடத்தியவர்களை தடுக்கவில்லை என்று கேட்டபோது தாக்குதல் நடத்தியவர்கள், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை தடுக்கவில்லை என்று பொலிஸார் கூறியதாக செய்தியாளர் அமித் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »