Latest News

January 26, 2015

காரை­ந­க­ரி­லி­ருந்து அராலி, சண்­டி­லிப்பாய் ஊடாக யாழ்ப்­பா­ணத்­துக்கு புதிய பஸ் சேவை
by admin - 0

VIVASAAYI.COM
KARAINAKAR
காரை­ந­க­ரி­லி­ருந்து அராலி, சங்­கு­வேலி, சண்­டி­லிப்பாய் ஊடாக யாழ்ப்­பா­ணத்­துக்கு புதிய பஸ் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. மகளிர் விவ­கார பிரதி அமைச்­சரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று இந்த சேவை­யினை சங்­கு­வே­லியில் வைத்து ஆரம்­பித்து வைத்தார்.
கடந்த 20 வரு­டங்­க­ளாக இந்தச் சேவை இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்­தது. பிரதி அமைச்­ச­ராக பதவி ஏற்­றுக்­கொண்ட திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு காரை­நகர் பஸ் டிப்­போவில் நேற்று காலை வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது. இந்த வர­வேற்­பை­ய­டுத்து புதிய பஸ் சேவை­யினை அவர் ஆரம்­பித்து வைத்தார்.
இதேபோல் நாவற்­குழி 300 வீட்­டுத்­திட்­டத்தில் வசிக்கும் பாட­சாலை மாண­வர்­களின் நலன் கருதி புதிய பஸ் சேவை­யொன்றை ஆரம்­பிக்­கு­மாறு இ.போ.ச.வின் வட­மா­காண டிப்­போக்­க­ளுக்­கான பொறுப்­ப­தி­கா­ரி­யிடம் பிரதி அமைச்சர் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.
காரை­நகர் பஸ் டிப்­போவில் நடை­பெற்ற வர­வேற்பு நிகழ்வில் உரை­யாற்­றிய பிர­தி­ய­மைச்சர்,
வட­மா­கா­ணத்­தி­லுள்ள யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, பருத்­தித்­துறை, காரை­நகர் பஸ் டிப்­போக்­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் பஸ் சேவை­யினை அதி­க­ரிப்­ப­தற்கும் அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்­துக்குள் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
நாவற்­குழி 300 வீட்­டுத்­திட்டம் 2004 ஆம் ஆண்டு எனது கணவர் மகேஸ்­வ­ர­னினால் ஆரம்­பித்­து­வைக்­கப்­பட்­டது. கடந்த ஆட்­சி­யா­ளர்கள் இந்த வீட்­டுத்­திட்­டத்­துக்­கான வச­திகள் எத­னையும். செய்­து­கொ­டுக்­க­வில்லை. இந்த வீடு­களில் வசிப்­ப­வர்கள் கூரை­க­ளற்ற வாழ்­வையே வாழ்ந்து வந்­தனர். இவர்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­படும்.
வடக்கில் பெண்கள், சிறு­வர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தப்­படும் சம்­ப­வங்கள் கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் நடை­பெற்­றன. காரை­நகர் ஊரி பகு­தியில் சிறு­மிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வாறான செயல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விடயம் தொடர்பில் பெற்றோரும் சமூகத்தினரும் விழிப்பாக இருக்கவேண்டியதும் அவசியமாகும் என்று தெரிவித்தார்.
« PREV
NEXT »