Latest News

January 03, 2015

பேரா­சி­ரியர் வேல்நம்­பிக்கு விருது
by admin - 0


ரா­சி­ரியர் தி. வேல்­நம்­பிக்கு தாய்­லாந்தில் விருது வழங்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழக முகா­மைத்­துவக் கற்­கைகள் வணிக பீடப் பீடா­தி­பதி பேரா­சி­ரியர் தி. வேல்­நம்பி பாங்­கொக்கில் இரண்டு விரு­து­களைப் பெற்­றுள்ளார். பாண்­டிச்­சே­ரியைத் தலை­மை­ய­மாகக் கொண்ட விஞ்­ஞா­னிகள், அபி­வி­ருத்­தி­யா­ளர்கள், சர்­வ­தேச பீடத்தின் மாநாடு பாங்­கொக்கில் உள்ள ஹொலிடே இன் விடு­தியில் அண்­மையில் இடம்­பெற்ற போது சிறந்த கல்­விசார் பீடா­தி­பதி மற்றும் சிறந்த கல்வி சார் ஆய்­வாளர் என்ற இரண்டு விரு­துகள் இவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.
இவரை விட யாழ்ப்­பாண பல்­க­லைக்­கழக விஞ்­ஞான பீட விரி­வு­ரை­யாளர் பா. கண்ணன் சிறந்த விஞ்­ஞா­னத்­துறை ஆய்­வாளர் விரு­தையும் யாழ். பல்­க­லைக்­கழக முகா­மைத்­துவக் கற்­கைகள் வணிக பீடத்தை சேர்ந்த இ. கஜா­னந்தன் சிறந்த மாண­வ­னுக்­கான விரு­தையும் பெற்­றுள்­ளனர்.
உல­க­ளா­விய நிலையில் 74 நாடு­களில் இருந்து கிடைக்­கப்­பெற்ற 9674 விண்­ணப்­பங்­களில் இருந்து தெரிவு செய்­யப்­பட்ட 27 பேர் மேற்கண்ட வகையில் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »