பிரான்சில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையின் துணை அமர்வு ஶ்ரீலங்கா அரசுக்கு கடும் சினத்தையும் அதிர்ச்சியையும் வழங்கியுள்ளது .
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மைய அமர்வை மேற்கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதனுடன் இணைந்ததாக துணை அமர்வினை பரஸ்பரம் பிரான்சில் மேற்கொண்டது.
பாரிசின் புறநகர் பகுதியான Le blanc mesnil நகரசபையில் துணை அமர்வு இடம்பெற்றதோடு நகரபிதா மற்றும் நமரசபை உறுப்பினர்களும் உத்தியோகபூர்வமாக கலந்து கொண்டு நா.த.அரசாங்கத்துக்கு ஆதருவு தெரிவித்தனர்.
இதில் பிரான்சின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மரி ஜோர்ச் புவே அவர்களும் கலந்து தனது தோழமையை வெளிப்படுத்தினார்
இதனால் அதிர்ச்சியடைந்த ஶ்ரீலங்கா பிரான்சுக்கான தூதரத்தினூடக தனது கட்டணத்தை தெரிவித்துள்ளது.
நகரசபையில் செல்வி ஸ்ரெபனி சுரேந்திரன் மற்றும் திருமதி கோபிநாத் ஆகிய ஈழத்தினை பூர்வீகமாக கொண்ட இருபெண்கள், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நகரசபை உறுப்பினர்களாக உள்ளனர் என்பது இங்கு குறிப்பிடதக்கது
No comments
Post a Comment