சுற்றிவர இராணுவமும் காவல்துறையும் குவிந்திருக்க பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றி பிரஸ்தாபித்த வேளைகளில் எல்லாம் ஆர்ப்பரித்த மக்களது உணர்வு எதிரணியினரை இன்று அதிர்ச்சிக்குள்ளாக்கியே இருந்தது
யாழ்ப்பாணத்தின் முத்திரை சந்தியிலுள்ள கேணல் கிட்டு பூங்காவினில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனிற்கும் தனக்குமிடையேயான சமாதான பேச்சு பற்றி பிரஸ்தாபித்திருந்தார். அவ்வேளையில் பிரபாகரன் பெயரைச் சொல்லவே திரண்டிருந்த மக்கள் ஆரவாரித்தனர்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான சந்திரிகா சிறிது நேரம் பேச்சை தொடர முடியாது திணறி பின்னர் பின் தொடர்ந்தார்.
அடுத்து பேசிய முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தனது உரையில் தான் மனச்சாட்சி படி யுத்தத்தை நடத்தியதாகச் சிங்களத்தில் பேச மொழி பெயர்த்தவரோ உயிர் இழப்புக்கள் இன்றி யுத்தத்தை நடத்தியதாக மொழி பெயர்த்தார். இதனால் ஆர்ப்பரித்த மக்கள் இன அழிப்பு கொலைகள் நடந்ததாக கூக்குரலிட்டனர்.
தொடர்ந்து பேசிய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி தனது உரையில் தான் மஹிந்த கட்டியுள்ள மாளிகைகளில் இருக்க மாட்டேனென கூற அதற்கும் மக்களிடமிருந்து கரகோசம் எழுந்தது. அடிக்கடி யாழ்ப்பாணம் வந்தால் மக்களிற்கு உங்களை நன்றாக பிடிக்குமென குரல்கள் எழுந்தன.
யாழ்ப்பாணத்தின் முத்திரை சந்தியிலுள்ள கேணல் கிட்டு பூங்காவினில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தினில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனிற்கும் தனக்குமிடையேயான சமாதான பேச்சு பற்றி பிரஸ்தாபித்திருந்தார். அவ்வேளையில் பிரபாகரன் பெயரைச் சொல்லவே திரண்டிருந்த மக்கள் ஆரவாரித்தனர்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான சந்திரிகா சிறிது நேரம் பேச்சை தொடர முடியாது திணறி பின்னர் பின் தொடர்ந்தார்.
அடுத்து பேசிய முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தனது உரையில் தான் மனச்சாட்சி படி யுத்தத்தை நடத்தியதாகச் சிங்களத்தில் பேச மொழி பெயர்த்தவரோ உயிர் இழப்புக்கள் இன்றி யுத்தத்தை நடத்தியதாக மொழி பெயர்த்தார். இதனால் ஆர்ப்பரித்த மக்கள் இன அழிப்பு கொலைகள் நடந்ததாக கூக்குரலிட்டனர்.
தொடர்ந்து பேசிய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி தனது உரையில் தான் மஹிந்த கட்டியுள்ள மாளிகைகளில் இருக்க மாட்டேனென கூற அதற்கும் மக்களிடமிருந்து கரகோசம் எழுந்தது. அடிக்கடி யாழ்ப்பாணம் வந்தால் மக்களிற்கு உங்களை நன்றாக பிடிக்குமென குரல்கள் எழுந்தன.
Social Buttons