Latest News

December 01, 2014

திறந்தவெளி ஒப்பந்தம் திறந்தவெளி சிறையில் இருக்கும் தமிழர்களுக்கு என்ன பலன்
by admin - 0

பொது எதிரணிகளுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பு விகாரமகாதேவி திறந்தவெளியில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது.    அரசியல் கட்சிகள், சிவில் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களென 35 அமைப்புகள்  இதில் கையெழுத்திட்டுள்ளன.  திறந்தவெளி சிறையில் இருக்கும் தமிழர்களுக்கு இந்த திறந்தவெளி புரிந்துணர்வு உடன்படிக்கை எந்த நன்மையும் அளிக்காது என்பதே உண்மை

 இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், கையெழுத்திட்டுள்ள 35 அமைப்புகளில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (சந்திரிகா பிரிவு), ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக கட்சி, புதிய சிஹல உறுமய, மௌபிம ஜனதா பெரமுன, தேசிய ஐக்கிய முன்னணி, உட்பட 20 கட்சிகள் அடங்குகின்றன.     
 

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றன.   இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உடன்படிக்கை தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும்  நன்மை தரப்போவதில்லை
சிங்கள மக்கள் குடும்ப ஆட்சியைவிரட்ட உதவலாம் இன முரண்பாட்டை களையாது என்பதே உண்மை.
« PREV
NEXT »

No comments