எகிப்தில் எச் 5 என் 1 (H5N1)வைக்காய்ச்சல் வைரஸ் தொற்றால் 3 பேர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் எகிப்தில் பறவைக்காய்ச்சல் தொற்றுக்கு 11 பேர் உள்ளாகியுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய மின்யா மாகாணத்தில் 40 வயது நபரொருவரும் 29 வயது பெண்ணொருவரும் உயிரிழந்துள்ள அதேசமயம் பெனிசுயெப் மாகாணத்தில் 25 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமியொருவர் குணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
Social Buttons