Latest News

November 03, 2014

மீரியபெத்த மண்சரிவு! திட்டமிட்ட இன அழிப்பு
by admin - 0

கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரில் புதையுண்ட மக்களை மீட்க இராணுவத்தினர் கடந்த 6 நாட்களாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்சரிவில் 400 பேர் வரை காணாமல்போனதாக கூறப்பட்டாலும், இதுவரையில் 6 சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிடுகையில்,
2005ம் ஆண்டிலிருந்து மலை வெடித்து இருந்தது. வேறு இடத்திற்கு எழும்புமாறு கூறியிருந்தார்கள். ஆனால் வீடு கொடுக்காமல் இந்த மக்கள் எங்கே போவது.
மக்கள் புதையுண்ட இடத்தை விட்டு இராணுவத்தினர் வேறு இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
5 அடி ஆழத்தில் தான் புதையுண்டு இருப்பார்கள் என அவர் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
« PREV
NEXT »