Latest News

November 03, 2014

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உயிர்கொடுக்க முற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கட்டுநாயக்கவில் தமிழ் இளைஞர் கைது!
by admin - 0


மத்தியகிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்த நிலையில் நாடு திரும்பிய திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான இந்த இளைஞர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் உயிரூட்டும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததாலேயே விமான நிலையத்திலுள்ள பயங்கரவாத விசேட தடுப்புப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் கைதுசெய்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாடான கட்டார் நாட்டிற்கு சென்றிருந்த நிலையிலேயே இவர் இன்று நாடு திரும்பியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

அதேவேளை இந்த நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிரூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கோபி மற்றும் தெய்வீகன் ஆகியோருடனும் தொடர்புகளை பேணி வந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
« PREV
NEXT »