Latest News

October 10, 2014

ஜெயக்குமாரியை விடுவிக்கக்கோரி வவுனியாவில் பேரணி
by admin - 0









காரணமின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும், ஜெயக்குமாரியை விடுவிக்க கோரியும் வவுனியா பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.45 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் இராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் திட்டமிட்டபடி நடைபெற்றது. 


வவுனியா நகரபை முன்பாகக் கூடிய மக்கள், தமது வாய்களைக் கறுப்பு துணியால் கட்டியபடி பதாகைகளை ஏந்தியவாறு பிரதான வீதியூடாக வவுனியா நீதிமன்று நோக்கி நகர்ந்தனர். இடையே பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டவேளை ‘தாம் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்கிறோம்’ என்று பொலிஸாருக்கு தெளிவுபடுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், நீதிமன்ற வளாகத்தின் முன் கூடி சிறிது நேரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். பின்னர் அங்கிருந்து நகர்ந்து, வவுனியா நகரசபை விளையாட்டு மைதானத்தை அடைந்து அங்கு பொதுக் கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.

வவுனியா பிரஜைகள் குழு ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் சிவபாதம் கஜேந்திரகுமார் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், உறுப்பினர்களான து.ரவிகரன், எஸ்.சிவமோகன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா பிரஜைகள் குழு பிரதிநிதிகள், தென்னிலங்கை மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.





« PREV
NEXT »

No comments