தனி ஈழம் அமைக்கும் நோக்கில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சர்வதேசத்தில் டயஸ்போறா (நாடுகடந்த தமிழீழ) தமிழீழ அரசாங்கத்தினை அமைத்து செயற்படுவதாக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தனது கிளிநொச்சி உரையில் குறித்துரைத்துள்ளார்.
வட இலங்கை நோக்கி மூன்றுநாள் சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அரசுத் தலைவ,ர் தனது முதன்நாள் கிளிநொச்சி பயணத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
டயஸ்போரா (நாடுகடந்த) தமிழீழ அரசாங்கத்தினை அமைத்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் , தாங்கள் அமைத்துள்ள தமிழீழ அரசாங்கத்துக்கு என பிரதமர், அமைச்சரவை, மேற்சபை என அரசாங்கத்துக்குரிய கட்டமைப்புக்களை அமைத்துள்ளதாக, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறு செயற்பட்டாலும் ஈழம் அமைப்பதற்கு ஒருபோதும் தான் இடமளிக்கப் போவதில்லை என மேலும் தெரிவித்துள்ள சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்று புலம்பெயர் தமிழீழ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்சியுள்ளார்.
No comments
Post a Comment