Latest News

October 17, 2014

ஐ.எஸ்., அல் கொய்தா இந்தியாவுக்கு விடுத்த மிரட்டல் உண்மையே: தேசிய பாதுகாப்பு படை தலைவர்
by admin - 0

டெல்லி: அல் கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த விடுத்த மிரட்டல் உண்மை தான் என தேசிய பாதுகாப்பு படை தலைவர் ஜே.என். சவுத்ரி தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலத்தில் இந்தியாவில் அல் கொய்தா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரித்தது. மேலும் ஸ்ரீநகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடி வேறு பறந்தது. ஆனால் சில முட்டாள்கள் தான் கொடியை பறக்கவிட்டதாகவும் மாநிலத்தில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் யாரும் இல்லை என்றும் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தேசிய பாதுகாப்பு படை தலைவர் ஜே.என். சவுத்ரி கூறுகையில்,

அல் கொய்தா, ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக மிரட்டல் விடுத்ததுள்ளனர். அவர்கள் எல்லையில் செயல்படும் லஷ்கர், ஜெய்ஷ், ஹர்கத், இந்தியன் முஜாஹிதீன் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்தால் அதனால் ஏற்படும் விளைவு அதிகம். அவர்கள் இணைந்து செயல்பட்டால் நாமும் அதற்கு ஏற்றது போல் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

« PREV
NEXT »

No comments