சர்வதேச விசாரணைக்குழுவை எதிர்த்த வர்கள், நிபுணர் குழுவை அமைத்திருப்பது யுத்தக் குற்றங்களையும் அதற்கு துணை போனவர்களையும் காப்பாற்றுவதற்காகவே யாகும்.
அரசினால் மேற்கொள்ளப்படும் ஏமாற்று நாடகத்தின் மற்றுமொரு கண்துடைப்பு அத்தியாயமே இந்நியமனமாகும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக் காரியாலயமான ஸ்ரீகொத்தாவில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மங்கள சமரவீர எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியினால் சர்வதேச விசாரணை ஒன்று தேவையென மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டும் இது தொடர்பில் அரசு பொருட்படுத்தாமல் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம். ஐ.நா விசாரணைக்குழு இலங்கைக்குள் வரக்கூடாது என்ற அரசாங்கம் ஐ.நா. விசாரணைக்குழுவை நாட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்ற பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றியது. ஆனால் இன்று காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு அமை க்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச நிபுணர்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் எமது நாட்டையும் பாராளுமன்றத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீடுகள் தேவையற்றது எனக் கூறி வந்த அரசானது இவ்வாறு நிபுணர் குழுவை அமைத்திருப்பது யுத்த குற்றங்கள் இடம்பெற காரணகர்த்தாவாக இருந்த முக்கியஸ்தர்களை காப்பாற்றி இறுதி யுத்தகால பகுதிகளில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்ப வற்றை இராணுவத்தின் மீது சுமத்துவதன் மூலம் அரசின் கீழ் இருக்கும் முக்கியஸ்தர்களை காப்பாற்றவே இவ்வாறான செயல்களில் ஈடுபட அரசு முயற்சிக்கின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத் தில் எமது நாட்டின் இராணுவமே சிறந்தது என உலக நாடுகளில் ஒப்புக் கொள்ளப்ப ட்டு உலக நாடுகளின் பிரச்சினைகளின் போது அந்த நாட்டின் தேவைகளுக்காக எமது நாட்டின் இராணுவம் வேண்டுகோ ளின் பேரில் அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலையில் இராணு வம் உலக நாடுகளின் சாபங்களுக்கும்இ குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகி உள்ளது. இதற்கு முழு பொறுப்பையும் அரசு ஏற்க வேண்டும்.
நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கும் ஐ.நா. விசாரணைக்குழுவின் செயற்பாடுகளை குழப்பியடிப்பதற்குமே இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாறாகஇ பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் அரசுக்குக் கிடை யாது.
சர்வதேச விசாரணைகளையும் அழுத்த ங்களையும் எதிர்த்தவர்களே இன்று சர்வதேச நிபுணர் குழுவை அமைப்பதானது அவர் களின் போலி நாடகத்தையும் இரட்டை வேடத்தையும் உறுதிப்படுத்துகிறது எனத் தெரிவித்தார்.
Social Buttons