Latest News

August 05, 2014

காஸாவிலிருந்து தனது படையினரைத் திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது!
by Unknown - 0

காஸாவுக்கு வெளியில், "பாதுகாப்பு நிலை"களில் அந்தத் துருப்புகள் நிறுத்தப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி காலை எட்டு மணிக்கு 72 மணி நேர போர் நிறுத்தம் துவங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக, இஸ்ரேலியப் படையினர் காஸாவிலிருந்து விலகுவார்கள் என லெப்டினென்ட் கர்னல் பீட்டர் லேனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போராளிகள் பயன்படுத்திய குகைகளை அழிப்பது என்பது என்ற இலக்கு நிறைவேற்றப்பட்டுவிட்டதாக இஸ்ரேலிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நான்கு வார கால மோதலில் 1,800 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக காஸா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 67 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் பணியாற்றிவந்த தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் இந்தத் தாக்குதலில் பலியானார்.
"இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர், காஸாவுக்கு வெளியில் 'பாதுகாப்பு நிலை'களில் நிறுத்தப்படுவார்கள். அந்த நிலைகளில் நாங்கள் தொடர்ந்து நீடிப்போம்" என லேனர் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »