அண்மையில் இலங்கை அகதிகள் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகில் வந்த காரணத்தினால் அவர்களை நடுக்கடலில் வைத்து பெரிய அதிவேக படகுகள் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை அகதிகளுக்காக செயற்ப்படும் அமைப்பான [ Refugee Action Coalition Sydney] ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த Ian Rintoul ,
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான சமவுரிமை மற்றும் அவர்களுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகள் இதுவரைக்கும் வழங்கப்படவில்லை.
தற்போதும் கடத்தல்கள் புலனாய்வு விசாரணைகள் என தமிழர்களுக்கு சரியான முறையில் இலங்கையில் பாதுகாப்பு இல்லை அதனால் தங்களது உயிரை பாதுகாக்கவே நாடு நாடாக இடம்பெயர்கின்றனர்.
அது மட்டுமன்றி இலங்கையில் வாழ்வதற்க்கான உரிமை மறுக்கப்பட்டதால் தான் அவர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக சென்றிருந்தார்கள். இந்தியாவில் இருந்து வந்தவர்களை மீண்டும் இனப்படுகொலையாளியான மகிந்தவிடம் ஒப்படைப்பது மாபெரும் தவறு என தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டமானது எதிர்வரும் 7 ம் திகதி சிட்னியில் உள்ள குடிவரவு அலுவலகத்துக்கு முன்னால் சரியாக 12 மணியளவில் இடம்பெறவுள்ளதென தெரிவித்தார்.
Social Buttons