Latest News

July 04, 2014

இராணுவமே வெளியேறு! எமது நிலம் எமக்கு வேண்டும் -கிளிநொச்சியில் போராட்டம்
by Unknown - 0

கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ” இராணுவமே நீ உன் வீட்டுக்குப் போ, நான் என் வீட்டுக்குப் போவதற்கு”, “எங்கள் நிலம் வேண்டும்”, “இராணுவமே எங்கள் பொருளாதார வளங்களைச் சுரண்டாதே போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைக் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
« PREV
NEXT »