Latest News

June 17, 2014

லண்டன் ஹறோ நகரத்தின் துணை நகரபிதாவாக சுரேஸ் கிருஷ்ணா தொிவாகியுள்ளாா்.
by admin - 0

லண்டனில் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற ஹறோ பகுதியின் கவுன்சிலரான சுரேஸ் கிருஷ்ணா ஹறோ நகரத்தின் துணை நகரபிதாவாக ( Deputy Mayor, London Borough of Harrow) தெரிவாகியுள்ளார். கடந்த 20 வருடங்களாக ஹரோ பகுதியில் வசித்து வருகின்ற சுரேஸ் கிருஷ்ணா 2010 ஆம் ஆண்டு முதல் ஹரோ றேனர்ஸ் லேன் வோர்ட் (Rayners Lane Ward) கவுன்சிலராக இருந்து வருகின்றார். அண்மையில் அவரது சமூக சேவைகளுக்காக சர்வதேச திறந்த பல்கலைக்கழகத்தால் டொக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். சமூக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பல நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.அத்துடன் அறக்கட்டளை நிறுவனங்களுக்காக நிதி திரட்ட நடத்தப்படுகின்ற போட்டிகள் மற்றும் விளையாட்டுக்களிலும் தனது பங்களிப்பை அளித்து வருகின்றார்





ஈழம் றஞ்சன் 

« PREV
NEXT »