Latest News

April 13, 2014

தமிழன் வடிவேலுவை மிரட்டும் தெலுங்கு அமைப்பினருக்கு எச்சரிக்கை.
by admin - 0

  தமிழ் மண்ணின் மகத்தான கலைஞன் வடிவேலு நடித்த ''தென்னாலிராமன்'' படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவு படுத்தியுள்ளதாக தெலுங்கர்களின் அமைப்பு கற்பனை செய்துகொண்டு போராட்டம் அறிவித்தது.தெனாலிராமன் திரைப்படத்தை வெளியிடும் முன் தெலுங்கர்களுக்கு போட்டு காட்ட வேண்டும் என்றும்,அப்படி காட்டவிட்டால் படத்தை திரையிட விடமாட்டோம் என்றும் மிரட்டினார்கள்.அடுத்த கட்டமாக படத்தில் கதாநாயகனாக நடித்த வடிவேலுவின் வீட்டை முற்றுகை இடுவோம் என்று... தமிழகத்திலே வாழும் தெலுங்கர்களின் அமைப்பு போஸ்டர் ஒட்டி மிரட்டியது.
அது தவறு என்றும், வடிவேலுவின் வீட்டை முற்றுகை இட விட மாட்டோம் என்றும் ''நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான்'' அவர்கள் அறிக்கை விட்டிருந்தார்.உடனே அந்த தெலுங்கர்களின் அமைப்பு தோழர் சீமானை கண்டித்தும் மிரட்டி வம்புக்கு இழுத்தும் பதில் அறிக்கை விட்டது.
அதை தொடர்ந்து நடிகர் வடிவேலு இன்று ''தமிழகத்திலே அனைத்து மொழி மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.அவர்களுக்குள் ''மொழி சண்டை''யை இழுத்து விட்டு விடாதீர்கள்'' என்று உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தோழர்களே
நாம் கூட சமீபத்திலே சந்தோஷ் சிவன் இயக்கிய ''இனம்'' படத்தை தடுத்து நிறுத்தினோம்.அதாவது படம் திரைக்கு வந்த பிறகு, படத்தை பார்த்துவிட்டு,திரைப்படம் ஒட்டு மொத்த ஈழப்போராட்டத்தையும் கொச்சை படுத்துகிறது என்பதனை உறுதி செய்து கொண்ட பிறகு, தடை செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை,படத்தை தமிழகம் முழுவதும் வாங்கி வெளியிட்ட இயக்குனர் லிங்கசாமி அவர்களுக்கு வைத்தோம்.
அவரும் தமிழ் அமைப்புகளின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து இனம் படத்தை நிறுத்தினார்.
ஆனால்
தெலுங்கர்கள் என்ன செய்கிறார்கள்??படம் வெளி வரும் முன்பே,மிரட்டி படத்தை இலவசமாக பார்க்க துடிகிறார்கள்.இது ஒரு மோசமான முன் உதாரணமாகிவிடும்.படைப்பு சுதந்திரத்தின் மீது கேள்வி எழுப்பி விடும்.
தென்னாலிராமன் திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே யார் இவர்களுக்கு படம் கிருஷ்ணதேவராயரை கிண்டல் செய்து எடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னது??????????????
அதை விட
தமிழ் நாட்டிலே இருந்துகொண்டு, தமிழர்களின் உழைப்பை சுரண்டி வாழுகிற ''மாற்று தேசிய இனத்தார்களுக்கு'' எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழர்களையே மிரட்டுவார்கள்.????
உயிருக்கு பயந்தவன் எவனும் இங்கு தமிழ் தேசிய தளத்தில் இல்லை.
தேவையில்லாத விடயங்களில் தலையிட்டு,தேவை இல்லாத இன வாதத்தை முன்னிறுத்தி தமிழர்களை வம்புக்கு இழுப்பதை தெலுங்கர்கள் நிறுத்தி கொள்ளுவது தான் நல்லது.
தமிழ் நாட்டை கடந்த அம்பது வருடங்களாக ஆள்கிற திமிர்...தமிழர்கள் சொரியகுடுக்குற சொரனைறவர்கள் என்கிற நெனப்பு...தமிழ்நாட்டிலேயே தமிழர்களை மிரட்டுகிற தைரியத்தை கொடுத்துள்ளது.
மதிப்புக்குரிய தமிழகத்திலே வாழும்
தெலுங்கு பேசும் மக்களே....
எங்கள் தலைவன் பிரபாகரனின் வருகைக்கு பிறகு நாங்கள் உரம் பெற்றிருக்கிறோம்.எங்களின் மண்ணை நாங்களே ஆளவேண்டும் என்கிற எழுச்சி பெற்று களத்திலே நிற்கிறோம்.ஆகவே,தெலுங்கர்கள் என்கிற அடையாளத்தோடு தமிழர்களை தமிழகத்திலேயே மிரட்டுவதை விட்டு விட்டு...உங்கள் பிழைப்பை பார்த்தால் அனைவருக்கும் நல்லது.தமிழர்களின் பெருமை மிகுத் தமிழன் நடிகர் வடிவேலுவை கில்லுக் கீரையாக நினைத்து சீண்டினால் ஏற்படும் விளைவுகுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டி வரும் என்று ''தமிழர் நலம் பேரியக்கத்தின்'' சார்பிலே எச்சரிக்கை விடுக்குறோம்.
தமிழா...தமிழா...
தமிழுணர்வு கொள்
தமிழனாய் நில்...

« PREV
NEXT »