உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க உடனடியாக சிறந்த உளநல மருத்துவரை நாடுவது சிறந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் ஆலோசனை வழங்கியுள்ளார். இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்ட கோபி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் அத்துடன் அவர் பதுங்கியிருக்க வீடுகளையும் பயணம் செய்ய வாகனங்களையும் வழங்கியிருந்ததாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்திருந்தார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்
எந்த பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைபின் மீது குற்றம் சுமத்துவதை அரசில் உள்ளவர்கள் பழக்கமாக்கி கொண்டுள்ளனர். இதனடிப்படையில் உயர்கல்வி அமைச்சரின் குற்றச்சாட்டும் அமைந்துள்ளது. இதனால் அரசாங்கத்தில் இருப்பவர்கள் தமது மனநிலையில் இருந்து விடுபட வேண்டும்.அத்துடன் உயர்கல்வி அமைச்சர் சிறந்த மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும் எனவும் சிறீதரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Social Buttons