ஐ,நா தூதரகத்துக்கு சென்று நடந்த தமிழ் இனப்படுகொலைக்கு நீதிக் கேட்டு ஐ,நா கொடியை கிழித்தெறிந்து கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் நேற்று இரவு நிபந்தனை பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறோம்.
மாணவர்கள் விடுதலைக்காக முழு வீச்சுடன் செயல்பட்ட அண்ணன்கள் திரு .திருமுருகன் காந்தி ,திரு .உமர், அக்கா வழக்குரைஞர் அங்கயற்கண்ணி கயல் மற்றும் முன்னணி வழக்கறிஞர்களுக்கும் , ஊடக நண்பர்களுக்கும் ,ஒருவருக்கு இருவர் வீதம் பிணை குடுத்த 24 தமிழின உணர்வாளர்களுக்கும், மாணவர்களை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்திய சக மாணவ போராளிகளுக்கும், இந்த ஐந்து நாட்களில் சிறைக்கு வந்து எங்களை சந்தித்த நூற்றுக்கணக்கான உணர்வாளர்களுக்கும் மற்றும் மாணவர்களின் விடுதலைக்கு காரணமாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மாணவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.
Social Buttons