Latest News

March 01, 2014

அமெ­ரிக்­காவின் ஜெனிவா பிரே­ர­ணை­ பொரு­ளா­தாரத் தடைக்கு வழிவகுக்கலாம் : ரில்வின் எச்சரிக்கை
by admin - 0

இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணை­யா­னது எதிர்­கா­லத்தில் எமக்­கெ­தி­ராக பொரு­ளா­தாரத் தடை விதிக்கும் நிலைமை வரை செல்­லலாம் என எச்­ச­ரிக்கை விடுக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா ஜெனீவா தொடர்­பாக அனைத்து எதிர்­கட்­சி­களும் ஓர­ணியில் இணைய வேண்­டிய தரு­ணத்தில் பலாத்­கா­ர­மாக தேர்­தலை புகுத்தி அர­சாங்­கமே கவ­னத்தை வேறு­பக்கம் திசை திருப்­பி­யது என்றும் அவர் குற்­றஞ்­சாட்­டினார்.
 
இது தொடர்­பாக ஜே.வி.பி.யி பொது செய­லாளர் ரில்வின் சில்வா மேலும் தெரி­விக்­கையில்
இலங்­கையில் மனித உரி­மைகள் தொடர்­பாக பேசு­வ­தற்கு அமெ­ரிக்­கா­விற்கு அரு­கதை கிடை­யாது ஏனென்றால் உலகம் முழு­வதும் நாடு­க­ளுக்குள் பலாத்­கா­ர­மாக அமெ­ரிக்கா புகுந்து அட்­ட­காசம் புரிந்­தது. மக்­களை எது­வி­த­மான இரக்­கமும் இல்­லாமல் கொன்று குவித்­தது.
 
எனவே, எமது நாட்­டுக்கு எதி­ராக அமெ­ரிக்கா பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வதை கடு­மை­யாக எதிர்க்­கின்றோம்.
 
எமது நாட்­டுக்கு எதி­ராக பயங்­க­ர­மான பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் இப்­பி­ரே­ர­ணையில் உள்­ளன. அதே­வேளை அர­சாங்­கத்தால் நிறை­வேற்­றக்­கூ­டிய விட­யங்­களும் இதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.
 
பொது­வாக இப்­பி­ரச்­சி­னையை நோக்­கினால் அர­சாங்­கத்தின் பிழைகள் கார­ண­மா­கவே அமெ­ரிக்கா தலை­யீடு உரு­வா­னது.
 
நாட்டில் மனித உரி­மை­களை ஜன­நா­ய­கத்தை அர­சாங்கம் பாது­காக்­க­வில்லை. கொலைகள், ஊடக அச்­சு­றுத்­தல்கள் ஊட­க­வி­ய­லா­ளர்கள், கடத்தல், கொலை என நாட்­டிற்குள் அரா­ஜ­கங்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்­கின்­றன.
 
இதற்கு சிறந்த உதா­ரணம் கட்­டு­நா­யக்க பொலிஸ் துப்­பாக்கிச் சூட்டில் ஒருவர் உயி­ரி­ழந்­த­போது அதற்கு பொறுப்­பேற்று பதவி வில­கிய அன்­றைய பொலிஸ் மா அதிபர் வெளி­நா­டொன்றில் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
 
இவ்­வாறு மனித உரி­மையை மீறிய ஒருவர் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்டால் எவ்­வாறு அந்த நாடு மனித உரிமை தொடர்­பாக அத்­தூ­து­வ­ரது கருத்தை ஏற்­றுக்­கொள்ளும்.
இவ்­வாறு எந்­த­வி­த­மான ராஜ­தந்­திர அறிவும் இல்­லா­த­வர்­களே வெளி­நா­டு­களில் தூது­வர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.
 
இவர்­களால் எவ்­வாறு ஜெனீவா பிரச்­சி­னையை கையாள முடியும். அத்­தோடு வெளி­நா­டு­க­ளுக்கும் உள்­நாட்­டுக்கும் அர­சாங்கம் வழங்­கிய உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இவ்­வாறு அர­சாங்கம் விட்ட பிழைகள் கார­ண­மா­கவே அமெ­ரிக்கா பிரே­ர­ணையை கொண்டு வரு­கின்­றது. இதனால் நாட்­டுக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்­தி­யதும் அர­சாங்­க­மே­யாகும். எனவே, அமெ­ரிக்­காவின் தலை­யீ­டுக்­கான முழுப்­பொ­றுப்­பையும் அர­சாங்­கமே பொறுப்­பேற்க வேண்டும்.
 
இலங்­கைக்கு எதி­ராக நாட்­டுக்கு அப­கீர்த்­தியை ஏற்­ப­டுத்தும் விதத்தில் அமெ­ரிக்கா ஐ.நா மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணையை முன் வைக்­க­வுள்ள சூழ் நிலையில் எதிர்­கட்­சிகள் நாட்­டு­மக்கள் அனை­வரும் ஒன்­று­தி­ரண்டு அதற்­கெ­தி­ரான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது கட்­டா­ய­மா­ன­தாகும்.
 
ஆனால் அதிலிருந்து எதிர்கட்சிகளின் கவனத்தை அரசாங்கமே திசைதிருப்பியது. பலாத்காரமாக தேர்தலை அறிவித்து எதிர்க்கட்சிகளின் கவனத்தை தேர்தல் நடவடிக்கைகளுக்கு திசைதிருப்பியது.
 
ஏன்? ஜெனீவாவை காட்டி தேர்தலை முதலில் வெற்றிக் கொள்வதே அரசின் இலக்காகும் என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
« PREV
NEXT »

No comments