அனைத்துலக சட்டங்களின் முன் இலங்கையை நிறுத்தும் நடவடிக்கையாக, சியராலியோனில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நாவினால் விசாரணைக்கு அமைக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் முன்னாள் தலைவரும், பிரபல அனைத்துலக சட்டவாளருமான Geoffrey Robertson QC தலைமையில் ஜெனிவாவில் ஊடகவியலாளர் மகாநாடு இடம்பெறுகின்றது.
இவ் ஊடகவியலாளர் மகாநாட்டில் Geoffrey Robertson QC அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் களத்தில் இறக்கியுள்ளது.
அரசியலமைப்பு, குற்றவியல் மற்றும் ஊடகவியல் சட்டங்களில் உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்றவரும், இவற்றில் மைல் கற்களாக கொள்ளப்படும் பல வழக்குகளின் ஆலோசகரும், பிரிவி கவுன்சில் (Privy Council), ஸ்ராஸ்பேர்க் (Strasbourg) நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய மனிதவுரிமை நீதிமன்றம் போன்றவற்றில் பல வழக்குகளில் பங்கெடுத்தவருமாக Geoffrey Robertson QC அவர்கள் விளங்குகின்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சட்டவாளர் Geoffrey Robertson QC அவர்கள் பங்கெடுப்பதோடு, அமெரிக்க சட்டவாளாருமான Mr Ali Beydoun அவர்களும் பங்கெடுத்துள்ளார். கூடவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் அவர்களும் பங்கெடுத்துள்ளனர்.
Social Buttons