Latest News

March 13, 2014

பெண்கள் சிறுவா்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம்
by admin - 0

வடமகாணத்தில் அண்மை காலமாக தொடா்ச்சியாக நடைபெற்று வரும் பெண்கள் சிறுவா்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நெல்லியடி நகர பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டமும் கவனயீா்ப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.
எமது பிரதேசத்தில் தொடா்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தற்கொலைகள் மதுபோதை பாவனைகள் சட்டவிரோத பணகொடுங்கல் வாங்கல் வன்முறைகள் போன்றவற்றுக்கு எதிராக விழிப்புடல் கவனயீா்ப்பு போராட்டம் அரசியலுக்கு அப்பால் பொதுநோக்கத்தை அடிப்படையாக கொண்டு நடைபெறவுள்ளது்.


 வடமாராட்சி பொதுமக்களின் ஏற்ப்பட்டால் நடைபெறும் கண்டனான ஆா்பாட்டத்திற்கு வடமாகணசபை உறுப்பினா் எஸ்.சுகீா்தன் தலைமையில் நெல்லியடி நகாில் ஆரம்பித்து கரவெட்டி பிரதேச செயலகத்தில் நிறைவடையவுள்ளது. அங்கு கரவெட்டி பிரதேச செயலாளா் எஸ் சிவசிறி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளா் இ.த.ஜெயசீலன் ஆகியோர் ஊடாக வடமாகண மாவட்ட அரச அதிபா்களுக்கு  மாஜா்கள் கையளிக்கபடவுள்ளது. அத்துடன் வடமாகண முதலமைச்சா் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகண பொலிஸ்மா அதிபா் ஆகியோருக்கு மாஜா்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இவ் கவனயீா்ப்பு போராட்டத்திற்கு வடமராட்சி பிரதேச செயலகங்கள். பிரதேச சபைகள் மற்று மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் மகளிர் அமைப்புக்கள் மற்றும் அரச,அரச சார்பற்ற நிறுவனங்கள்.பொது அமைப்புக்கள் ஆதரவளித்துள்ளனர். எனவே இவ் கவனயீா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் தவறாது கலந்து கொண்டு எதிர்காலத்தில் குற்றச்செயல்களை இல்லாதொழிக்க போராட்டத்தில் கலந்து கொண்டு குரல் கொடுக்க அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.



எஸ்.செல்வதீபன்
« PREV
NEXT »

No comments