Latest News

February 09, 2014

சிறிலங்கா அரசுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்: நடை பயண வீரர்களை வாழ்த்துக் கூறும் பினாங்கு மாநில முதலமைச்சர்
by admin - 0

ஈழத்தமிழர்கள் நிலம் பறிக்கப்பட்டு அவர்கள் அழிக்கப்படுகிறார்கள், இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்திடம் நீதி கேட்டு ஐநா நோக்கி பயணம் செய்யும் வீரர்களுக்கு மலேசியாவில் உள்ள பினாங்கு மாநில முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி வாழ்த்துத் தெரிவிக்கின்றார். 

மேலும், எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருக்கும் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுகின்றார்.

தமிழரின் உரிமைக் குரலாக 11ம் நாளாக ஐ.நா. நோக்கி தொடருகின்ற நீதிக்கான நடை பயணம்

29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணமானது வெற்றிக்கரமாக 08.02.2014 அன்று பெல்ஜீயம் நாட்டில் உள்ள Somme-Leuze நகரத்தை வந்தடைந்தது.

தொடர்ந்தும் மழையும் குளிருமாகச் சீரற்ற காலநிலையாக இருப்பதால் நடை பயணத்தை முன்னெடுக்கின்ற மனித நேயப்பணியாளர்கள் பல்வேறு வேதனைகளையும் துயரங்களையும் சுமந்து உறுதி தளராமல் தாய்மண்ணை மனதில் நிறுத்தி நடை பயணத்தை தொடர்கின்றனர்.

நடைபயணத்தில் ஈடுபட்டுள்ள மனித நேயப்பணியாளர்களுக்கு தனது ஆதரவை வழங்கும் முகமாக சீரற்ற காலநிலையானபோதும் பிரித்தானியா நாட்டில் இருந்து வருகை தந்து தமிழ் இன உணர்வாளர் ஒருவர் நடை பயணத்தில் ஈடுபட்டு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

பெல்ஜீயம் வாழ் தமிழ் உறவுகளும் நடைபயணத்தை முன்னெடுக்கின்ற மனித நேயப்பணியாளர்களை உரிமையுடன் வரவேற்று அவர்களை உபசரித்து தமது தார்மிக ஆதரவை வழங்குகின்றார்கள்.

தமிழ் மக்களுடைய செயற்பாடுகள் தமக்கு மகிழ்வையும் புதிய உற்சாகத்தையும் தருவதாக நடை பயணத்தை முன்னெடுக்கும் மனித நேயப்பணியாளர்கள் அறியத்தந்துள்ளார்கள்.

நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments