Latest News

February 06, 2014

கிளிநொச்சியில் யாழ்பல்கலைக்கழக வளாகம் அறிவிப்பு
by admin - 0

இலங்கையின் வடக்கே கிளிநொச்சியில் புதிதாக பொறியியல் பீடம்
ஒன்றை ஆரம்பிப்பதற்கும், யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த விவசாய
பீடத்தை மீண்டும் செயற்படுத்துவதற்குமான சமய நிகழ்வில் கலந்து கொண்ட
கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, இந்த இரண்டு பீடங்களும் யாழ்
பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகமாக விரைவில் உயர்த்தப்படும் என
தெரிவித்திருக்கின்றார். கிளிநொச்சி அறிவியல் நகரில் 550 ஏக்கர் இடப்பரப்பில் இந்த
இரண்டு பீடங்களும் செயற்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்
பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற
நீண்ட கால கோரிக்கை இதன் மூலம் நிறைவேறுவதாகத் தெரிவித்த அமைச்சர்
திசாநாயக்க, யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு அனுமதிக்கப்படும்
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சிக்கு விரைவில் வருகை தரவள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச,
இந்த பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை முறையாக திறந்து வைப்பார்
என்றும் அமைச்சர் கூறியிருக்கின்றார். இன்றைய நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.சந்திரகுமார், யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வசந்தி அரசரட்னம்
மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையளர்கள் உள்ளிட்ட பலரும்
கலந்து கொண்டனர்.
« PREV
NEXT »

No comments