Latest News

January 20, 2014

நம்பிக்கையை ஏற்படுத்தும்வகையில் விசாரணை அமைய வேண்டும்
by admin - 0

ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள காணாமல் போனோர் தொடர்­பான ஆணைக்­குழு தனது விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. கிளி­நொச்சி மாவட்­டத்தில் கடந்த சனிக்­கி­ழமை முதல் எதிர்­வரும் செவ்­வாய்க்­கி­ழமை வரை ஆணைக்­குழு தனது விசா­ர­ணை­களை மேற்­கொள்­ள­வுள்­ளது. சனிக்­கி­ழமை ஸ்கந்­த­புரம், அக்­க­ரா­யன்­குளம், கண்ணகி­புரம் ஆகிய கிராம சேவையாளர் பிரி­வு­க­ளிலும், காணாமல் போன­வர்கள் தொடர்பில் ஸ்கந்­த­புரம் அ.த.க. பாட­சா­லையில் இந்த விசா­ரணை நடை­பெற்­றது.
காணா­மல்­போனோர் விவ­காரம் தீர்­வின்றி தொடர்ந்து வரு­கின்­றது. யுத்­தத்தின் போதும் அதன் பின்­னரும் ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்கள் காணாமல் போயுள்­ளனர். இவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பது குறித்து அறி­ய­ முடி­யாமல் அவர்­க­ளது உற­வி­னர்கள் நாள்­தோறும் பெரும் துக்­கத்­துடன் வாழ்ந்து வரு­கின்­றனர். காணாமல் போன தமது பிள்­ளை­களை, கணவன்மார்­களை, உற­வி­னர்­களை தேடிக்­க­ளைத்த நிலையில் அவர்கள் என்ன செய்­வ­தென்று தெரி­யாது கலங்­கி­யுள்­ளனர்.
தமது உற­வு­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரி காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் பல போராட்­டங்­களை நடத்­தி­யி­ருந்­தனர். ஆனாலும், இவர்­க­ளது கோரிக்­கைக்கு அர­சாங்கம் செவி­சாய்க்­கவே இல்லை. காணாமல் போனோர் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­பட்டு அந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட­வேண்­டு­மென்று சர்­வ­தேச சமூ­கமும் தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. அர­சாங்­கத்­தினால் நிய­மிக்­கப்­பட்ட நல்­லி­ணக்க ஆணைக்­குழு தனது பரிந்­து­ரை­களில் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தது.
நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் நூற்­றுக்­க­ணக்­கான காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தனர். பெரு­ம­ள­வானோர் எழுத்­து­மூலம் தமது உற­வு­களை தேடிக் ­கண்­டு­பி­டித்துத் தரு­மாறு கோரி மக­ஜர்­க­ளையும் சமர்ப்­பித்­தி­ருந்­தனர். நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவும் வடக்கு, கிழக்கு உட்­பட பல பகு­தி­களில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டது. இதன்போது காணாமல் போனோ­ரது உற­வி­னர்கள் ஆயி­ரக்­க­ணக்­கானோர் சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வந்­தி­ருந்­த­போ­திலும், சில நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­க­ளிடம் மாத்­தி­ரமே ஆணைக்­குழு வாக்­கு­மூ­லங்­களை பெற்­றி­ருந்­தது.
இதன் அடிப்­ப­டையில் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் விசா­ரணை நடத்த அந்தப் பிரச்­சி­னைக்கு தீர்வுகாண்­ப­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு அமைக்­கப்­ப­ட­வேண்டும் என்று பரிந்­துரை செய்­யப்­பட்­டது. நல்­லி­ணக்க ஆணைக்­குழு இந்தப் பரிந்­து­ரை­யினை செய்­தி­ருந்த போதிலும், தற்­போ­துதான் இந்த ஆணைக்­குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.
இலங்­கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் படை­யினர் சம்­பந்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­படும் முறைப்­பா­டுகள் குறித்து உரிய விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு பரிந்­து­ரைத்­தி­ருந்­தது. இதற்­கி­ணங்க இரா­ணுவ பிரி­கே­டியர் தலை­மை­யி­லான இரா­ணு­வக்­கு­ழு­வொன்று விசா­ரணை மேற்­கொண்­டது. இந்த விசா­ர­ணையின் முடிவில் படை­யினர் எத்­த­கைய மனித உரிமை மீறல்­க­ளிலும் ஈடு­ப­ட­வில்­லை­யென்றும் காணாமல் போனோர் என்று நாட்டில் எவரும் இல்லை எனவும் அறி­விக்­கப்­பட்­டது.
இந்த விசா­ரணை அறிக்­கை­யினை வெளியிடும் நிகழ்வில் உரை­யாற்­றிய பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவும் நாட்டில் காணா­மல்­போனோர் என்று எவரும் இல்லை என்று கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். இந்த விசா­ரணை அறிக்கை காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. காணா­மல்­போன தமது உற­வுகள் எங்­கா­வது உயி­ரோடு இருப்­பார்கள் என்ற நம்­பிக்­கையில் அவர்­களை உற­வி­னர்கள் தேடிவரு­கின்­றனர். இந்த நிலையில் நாட்டில் காணாமல் போன­வர்கள் என்று எவரும் இல்லை என்று அறிக்கை வெளியி­டப்­பட்­டமை அவர்­க­ளது நம்­பிக்­கையை தவி­டு­பொ­டி­யாக்கும் வித­மா­கவே அமைந்­தி­ருந்­தது.
இந்த அறிக்­கை­களின் பின் காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் உரிய தீர்வு காணப்­பட­வேண்டும் என்று அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டது. கடந்த வருடம் இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருந்த ஐ.நா.வின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை காணா­மல் ­போனோ­ரது உற­வி­னர்­களை சந்­தித்து அவர்­க­ளது உள்­ளக்­ குமுறல்கள் குறித்து அறிந்து கொண்டார். அவரைச் சந்­தித்த காணா­மல்­போ­ன­ரது உற­வி­னர்கள் கதறி அழுது தமது உற­வி­னர்­களை மீட்­டுத்­த­ரு­மாறு பல இடங்­களில் கோரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.
இவ­ரது வரு­கைக்கு சில வாரங்­க­ளுக்கு முன்­னரே காணாமல் போன­வர்கள் குறித்து விசா­ரணை செய்­வ­தற்­காக முன்னாள் நீதி­ய­ரசர் மக்ஸ்வெல் பராக்­கி­ரம பர­ண­கம தலை­மையில் ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. இந்த ஆணைக்­குழு காணாமல் போன­வர்கள் தொடர்­பான முறைப்­பா­டு­களை தமக்கு அறி­விக்­கு­மாறு கூறி­யது. இதற்­கி­ணங்க 8 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் இந்த ஆணைக்­கு­ழு­விடம் முறை­யிட்­டுள்­ளனர். இதேபோல் இரா­ணு­வத்தில் இருந்­த­போது காணா­மல்­போ­னோ­ரது முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன.
இந்த ஆணைக்­கு­ழுவே தற்­போது தனது விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. கிளி­நொச்­சியில் நேற்றும், நேற்று முன்­தி­னமும் இடம்பெற்ற விசா­ர­ணை­களின் போது காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளனர்.
இறுதி யுத்­தத்தின் பின்னர் இரா­ணுவ கட்­டுப்­பாட்­டுப்­ப­கு­திக்குள் சென்­ற­வர்­களும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்­களும் இரா­ணு­வத்­தி­னரால் கைதுசெய்­யப்­பட்­ட­வர்­க­ளுமே அதி­க­ளவில் காணாமல் போயுள்­ளனர் என்று இந்த விசா­ர­ணையின் போது சாட்சி­ய­ம­ளித்த மக்கள் முறைப்­பாடு தெரி­வித்­துள்­ளனர்.
சர­ண­டைந்­த­வர்கள் மற்றும் கைதுசெய்­யப்­பட்­ட­வர்கள் புலி­க­ளாக இருந்தால் கூட அவர்கள் காணாமல்போன­மைக்கு இரா­ணு­வமே பொறுப்­புக்­ கூ­ற­வேண்டும். இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுப்­ப­கு­தி­யி­லேயே இவர்கள் காணா­மல்­போ­யுள்­ளனர். காணா­மல்­போன எமது உற­வுகள் இன்­னமும் உயி­ரு­ட­னேயே இருக்­க­வேண்டும். எனவே அவர்­களை மீட்­டுத்­தா­ருங்கள் என்று இந்த ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்த மக்கள் அழுது புலம்பி கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
நல்­லி­ணக்க ஆணைக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளிக்க காணா­மல்­போ­னோ­ரது உற­வி­னர்கள் முண்­டி­ய­டித்­தது போல் தற்­போ­தைய ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லை­யிலும் தமது காணா­மல்­போன உற­வுகள் தொடர்பில் சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு மக்கள் அலை­மோ­தி­வ­ரு­கின்­றனர். நேற்று முன்­தினம் கிளி­நொச்­சியில் மூன்று கிரா­ம­சே­வகர் பிரி­வு­க­ளையும் சேர்ந்த 35 பேர் மட்­டுமே சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர். ஆனால் 75 பேர் வரையில் சாட்­சி­ய­ம­ளிக்க வந்­தி­ருந்­தனர். ஆனாலும், அவர்­களை சாட்­சி­ய­ம­ளிப்­ப­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு அனு­ம­திக்­க­வில்லை.
தமது காணா­மல்­போன உற­வுகள் தொடர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு­விடம் சாட்­சி­ய­ம­ளித்து தமது மன ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தவே இந்த உற­வுகள் முயல்­கின்­றன. நேற்று இடம்பெற்ற ஆணைக்­குழு விசா­ர­ணை­யின்­போது சாட்­சி­ய­ம­ளிக்க வந்த மக்கள் இந்த ஆணைக்­கு­ழு­வா­னது வெறும் விசா­ரணை செய்யும் குழு­வாக இல்­லாமல் எமது உற­வு­களை மீட்­டுத்­தரும் குழு­வாக செயற்­ப­ட­வேண்டும் என்றும் கோரி­யுள்­ளனர்.
காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரிப்­ப­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வா­னது காணா­மல்­போனோர் தொடர்பில் உரிய வகையில் விசா­ரணை நடத்­த­வேண்டும். யாரால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டாரோ அல்லது யாரிடம் குறித்த நபர் சரணடைந்தாரோ அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான அதிகாரங்கள் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவேண்டியது இன்றியமையாததாகும்.
நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை இடம்பெற்றபோது அந்த ஆணைக்குழு மீதோ அல்லது ஆணைக்குழுவின் விசாரணைகள் மீதோ தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனாலும், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமது உள்ளக்குமுறல்களை மக்கள் வெளிப்படுத்தி­யிருந்தனர். இதற்கிணங்க, இந்த ஆணைக்குழுவும் ஓரள­விற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க பரிந்துரைகளை செய்திருந்தது. அந்தப் பரிந்துரைகள் கூட இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை.
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவானது தனது கடமையினை சரிவர செய்ய வேண்டும். இதன் மூலமே தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
« PREV
NEXT »

No comments