Latest News

January 04, 2014

வவுனியா பொது வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்
by admin - 0

வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லைக்கு போது­மான தாதி­யர்கள் வழங்­கப்­ப­ட­வில்லை என வவு­னியா பொது வைத்­தி­ய­சாலை தாதி­யர்கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.
2014 ஆம் ஆண்டு தாதிப் பயிற்சி பெற்று வெளி­யே­றிய சுமார் 1,800 க்கும் மேற்­பட்ட தாதி­யர்­களில் வவு­னியா பொது வைத்­தி­ய­சா­லைக்கு 95 தாதி­யர்கள் கோரி­யி­ருந்த போதிலும் 12 தாதி­யர்கள் மாத்­திரம் வழங்­கப்­பட்டுள்ளனர். அவர்­களில் ஒன்­பது பேரே தமது பொறுப்பை ஏற்­றுள்­ளனர்.
இதே­வேளை, வட­மா­கா­ணத்­திற்கு 46 தாதி­யர்­களே வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்­களில் 41 பேரே கட­மையை பொறுப்­பேற்­ற­மையால் மாகா­ணத்­திற்கு தேவை­யான தாதி­யர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை எனவும் போது­மான தாதி­யர்கள் வழங்­கப்­பட வேண்டும் என்றும் சகல வச­தி­களும் உள்ள வவு­னியா பொது­வைத்­தி­ய­சா­லைக்கு ஒன்­பது தாதி­யர்கள் போது­மா­ன­வர்கள் இல்லை எனவும் இனி­வரும் காலங்­களில் தாதியர் படிப்பை முடித்து வெளி­யே­று­ப­வர்­களை இவ் வைத்­தி­ய­சா­லைக்கு நிய­மிக்­கக்­கோரி இவ் ஆர்ப்­பாட்­டத்தில் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.
வவு­னியா அரச தாதியர் உத்­தி­யோ­கத்தர் சங்கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த இவ் ஆர்ப்பாட்டம் நேற்று முற்பகல் 12 மணி தொடக்கம் 01 மணி வரை வவுனியா பொது வைத்தியசாலை முன்றலில் நடைபெற்றது.
« PREV
NEXT »

No comments