Latest News

January 02, 2014

மன்னார் புதை­குழி விவ­காரம் மனித உரிமை மீற­லுக்கு சான்று ஜ.ம.மு. விசனம்; விசா­ர­ணைக்கு கோரிக்கை
by admin - 0

திருக்­கே­தீஸ்­வரம் சமய குரவர் இரு­வரால் தேவாரம் பாடப்­பட்டு இந்­துக்­களால் பழமை வாய்ந்த புனித தல­மாக மதிக்­கப்­படும் இட­மாகும். இத்­தல வளா­கத்தில் மனிதப் புதை­குழி காணப்­ப­டு­வது உலக வாழ் இந்­துக்­களின் மனதில் வெந்த புண்ணில் வேல் ­பாய்ச்சும் செய­லுக்கு ஒப்­பா­னது என ஜன­நா­யக மக்கள் முன்­னணி ஊடகச் செய­லா­ளரும் கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­னரும் வீட­மைப்புத் துறை தலை­வ­ரு­மான சி. பாஸ்க்­கரா விசனம் தெரி­வித்­துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,
இலங்­கையில் இன­வாதம் தாண்­டவம் ஆடு­வது உல­க­றிந்த விட­ய­மாகும். தற்­போது மத­வாதம் தலை­வி­ரித்­தா­டு­வதும் உலகம் அறிந்த விட­ய­மே­யாகும். குறு­கிய காலத்தில் பல இந்து, கிறிஸ்­தவ, பள்­ளிவாசல்கள் உடைக்­கப்­ப­டு­வதும், திரு­டப்­ப­டு­வதும் யாவரும் அறிந்­த­தே­யாகும். இதை வன்­மை­யாக மனச்சாட்­சி­யுள்ள மனி­தர்­களும் உலக நாடு­களும் கண்­டித்­தமை நாம­றிந்த விட­ய­மாகும்.
இவ்­வே­ளையில் எல்­லாற்­றையும் விஞ்­சு­வ­தாக அமைந்­துள்­ளது இன­வெ­றி­யாட்டமே. அதை­விட மேலாக மத­வெறி நட­வ­டிக்­கையின், உச்­ச­நி­லையே திருக்­கே­தீஸ்­வர வளா­கத்தில் காணப்­படும் மனிதப்புதை­கு­ழியாகும். இப் பாதகச் செயலை எவர்? எப்போ செய்­தி­ருப்­பினும் மன்­னிக்க முடி­யாத குற்­றமும் கண்­டிக்­கத்­தக்­கதும் ஆகும்.

புதைகுழியில் கண்­டெ­டுக்­கப்பட்ட 1982ஆம் ஆண்டு தயா­ரித்து பாவ­னைக்கு விடப்­பட்ட 25 சத நாணயக்குற்றி முக்­கிய ஒரே தட­ய­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது. அக்­கா­லத்து சூழ்­நி­லையை நாம் கவ­ன­மாக நோக்­குதல் வேண்­டு­மே­யாகும்.
கோவில் வளாகம் முழுக்க முழுக்க இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டிலும் இரா­ணு­வத்தின் கண்­கா­ணிப்­புக்கும் உட்­பட்ட பிர­தே­ச­மாக கடந்த 82ஆம் ஆண்­டுக்குப் பின் இருந்­தமை தர­வுகள் மூலம் அறியக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
1982ஆம் ஆண்டு முதல் 90 முதல் பூஜை வழி­பா­டு­க­ளுடன் கோவில் இருந்­த­மையும் 90 முதல் 2002ஆம் ஆண்டு வரை இரா­ணுவ கட்­டுப்­பாட்­டு­டனும் பூசை வழி­பா­டுகள் இன்­றி­யி­ருந்­த­மையும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ள­வேளை 2002ம் ஆண்­டுக்கு பிற்­பட்ட காலம் முதல் இரா­ணுவ அனு­ம­தி­யுடன் 2003ஆம் ஆண்டு கும்­பா­பி­ஷே­கத்­துடன் பூஜை வழி­பாடு இன்­று­வரை நடை­பெ­று­கின்­ற­தையும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
இதனை கவ­னித்துப் பார்க்­கும்­போது இரா­ணுவம் கொலைக் குற்­ற­வா­ளி­களை கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தவேண்­டிய கட­மைப்­பாட்டை தட்டிக் கழிக்க முடி­யா­தது புல­னா­கி­றது.
இதனை கருத்திற்கொண்டு கிரு­ஷாந்தி கொலையை அரசு மறுத்து உச்ச ஆதா­ரத்­துடன் நிரூ­பிக்­கப்­பட்ட பின் கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு சட்­டத்தின் உச்ச தண்­ட­னை­யான மரண தண்­டனை வழங்க்­கப்­பட்­டது யாம­றிந்­ததே. மேலும், மரண தண்டனை கைதி தனது இறுதி விருப்­ப­மாக கிருஷாந்தி கொலை விபரத்தை தெரி­விக்க முன்­வந்த போது மரண தண்­டனைக் கைதி யின் விபரம் தெரி­யாமல் போனதும் நாம­றிந்த உண்­மை­யாகும்.
அரசு மேலும் காலத்தைத் தாழ்த்­தாமல் கிரு­ஷாந்தி வழக்­குப்போல் நடை­பெற இட­ம­ளிக்­காமல் தக்க பக்கச்சார்­பற்ற விசா­ரணை நடத்தி கொலைப்­பா­த­கர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உச்ச தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரில் தொடர்சிக்கலில் இருந்து அரசு ஓரளவு மீள்வதற்கான சூழ்நிலை ஏற்படும். இல்லையேல் இலங்கைக்கான இன்னல் நிரந்தரமாக மாறிவிடும்
« PREV
NEXT »

No comments