Latest News

December 14, 2013

பங்களாதேஷ் இஸ்லாமிய தலைவருக்கு போர் குற்றங்கள் தொடர்பில் மரணதண்டனை
by admin - 0

பங்­க­ளாதேஷ் இஸ்­லா­மிய தலைவர் அப்துல் காதர் முல்­லா­ஹிற்கு 1971 ஆம் ஆண்டு பாகி­ஸ்­தா­னி­லி­ருந்து சுதந்­தி­ர­ம­டை­வ­தற்­கான போர் காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொ­லைகள் தொடர்பில் வியா­ழக்­கி­ழமை இரவு மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.
பங்­க­ளா­தேஷின் குற்­ற­வியல் தீர்ப்­பா­யத்தால் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்ட முத­லா­வது நப­ராக முல்லாஹ் விளங்­கு­கிறார்.
1971 ஆம் ஆண்டு போரின் போது இடம்­பெற்ற துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக 2010 ஆம் ஆண்டில் சர்­வ­தேச குற்­ற­வியல் தீர்ப்­பாயம் ஸ்தாபிக்­கப்­பட்­டது.
ஜமாத் – ஈ – இஸ்­லா­மிய கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்­களில் ஒரு­வ­ரான முல்லாஹ் இந்த வருட ஆரம்­பத்தில் நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட போது, டாக்­காவின் புற­ந­க­ரப் ­ப­கு­தி­யான மிர்­பூரில் இடம்­பெற்ற படு­கொ­லை­க­ளுக்கு கார­ண­மாக இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.
அவ்­வாறு படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­களில் நிரா­யு­த­பா­ணி­க­ளான பொது மக்­களும், பாகிஸ்­தா­னி­லி­ருந்து சுதந்­திரம் பெறு­வ­தற்கு ஆத­ர­வ­ளித்த புத்­தி­ஜீ­வி­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.
முல்லாஹ் தனக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ளார்.
இந்­நி­லையில் அவ­ருக்கு (65 வயது) டாக்கா மத்­திய சிறைச்­சா­லையில் வியா­ழக்­கி­ழமை அந்­நாட்டு நேரப்­படி இரவு 10.01 மணிக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.
அவ­ருடன் இறுதி சந்­திப்பை மேற்­கொள்ள அவ­ரது குடும்­பத்­திற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
இந்த சந்­திப்பின் போது முல்லாஹ் மிகவும் அமை­தி­யாக இருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
தான் பங்­க­ளா­தே­ஷி­லுள்ள இஸ்­லா­மிய இயக்­கத்­திற்­காக உயிரை தியாகம் செய்­வ­தை­யிட்டு பெரு­மை­ய­டை­வ­தாக முல்லாஹ் தெரி­வித்­த­தாக அவ­ரது மகன் ஹஸன் ஜமீல் கூறினார்.
முல்­லாஹ்வின் மரணதண்­டனை நிறை­வேற்­ற­த்தை­ய­டுத்து பதற்ற நிலை ஏற்­ப­டலாம் என்ற அச்­சத்தில் தலை­நகர் டாக்­காவில் பாது­காப்பு என்­று­மில்­லா­த­வாறு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இந்நிலையில் டாக்காவில் அவரது ஆத­ர­வா­ளர்கள் வெள்­ளிக்­கி­ழமை வன்­முறை மோதல்­களில் ஈடு­பட்­டனர்.
அதேசமயம் ஜமாத் – ஈ – இஸ்லாமி கட்சியின் ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே வியாழக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 3பேர் பலியானார்கள்.
« PREV
NEXT »

No comments