இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன? இதனை இந்திய அரசாங்கம் முதலில் வெளியிட வேண்டும் என்கிறார் ஐ. நா. சர்வதேச மன்னிப்புச்சபையின் இந்தியப் பிரதிநிதி ஆனந்த பத்மநாதன். போரின்போது தமிழர்களைப் பாதுகாக்க இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் அவர்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. இன்னும் மூன்றரை மாத கால அவகாசம் உள்ளது.
இலங்கை அரசுக்கு மிகப்பெரும் சோதனைக்களமாக அந்தக் கூட்டத்தொடர் அமையப் போவதாக பல ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். “நாங்களும் தயார் வரட்டும் பார்க்கலாம்” என இலங்கை அரசு அறிக்கைகளை வெளியிட்டாலும், அதன் தரப்பு மிகப் பலவீனமாக இருப்பதாக இன்னர்சிட்டிபிரஸ் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளருடன் இலங்கை ஜனாதிபதி செய்து கொண்ட ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என அச் சஞ்சிகை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. ஐ.நா. வின் உள்ளக ஊடகமான இன்னர்சிட்டி பிரஸ் போரின் போது இலங்கையில் இடம்பெற்ற மனித அவலங்கள் தொடர்பாக ஐ. நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளதும் இங்கு குறிப்பிடக்கூடியதாகும்.
இம்முறை மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசு எதிர்கொள்ளவிருக்கும் சவால் என்பது சாதாரணமானதல்ல, அதனை எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
சர்வதேச ரீதியில் இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டு அந்த வாக்குறுதிகளே அதற்கு எதிரான சாட்சிகளாக மாறியுள்ளன.
இப்பிரச்சினை தொடர்பாக ெவாஷிங் டன் போஸ்ட் நாளிதழ் ஏற்கனவே சில விபரங்களை வெளியிட்டிருந்தது. அதனை ஒத்ததான கருத்துக்களை நியூயோர்க் டைம்ஸ் நாளிதழும் தெரிவித்துள்ளது.
சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்குவதென்பது தேர்தல் வாக்குறுதிகளை போன்றதல்ல என அவை சுட்டிக்காட்டியுள்ளனர் இலங்கை அரசுக்கு எதிரான நடவடிக்கை என்றதும் வாக்குறுதிகளை வழங்கி அதனை நீத்துப்போகச் செய்ய முடியாது. ஒரு சில காலங்களுக்கு ஒத்தி வைக்கலாம். நடவடிக்கை ஒத்தி போடப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தவறை திருத்திக்கொள்ள இலங்கை அரசுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது என்பதே பொருளாகும்.
ஆனால் இலங்கை அரசு அதனைப் பயன்படுத்தத் தவறி விட்டது. இருப்பினும் மார்ச் மாதம் வரை ஒரு சந்தர்ப்பம் இலங்கை அரசின் பக்கம் இருக்கின்றது.
அதனைச்சரிவரப் பயன்படுத்தினால் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு முகம் கொடுக்கலாம். வழமை போல் வேறு வழிகளை நாடினால் நிலைமை மோசமடையும் என்பதே தற்போதைய நிலை என அவை சுட்டிக்காட்டியுள்ளன.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அடுத்த ஆண்டு கூட்டத் தொடரில் இலங்கை, சிரியா ஆகிய நாடுகளுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றே சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கை அரசுக்கு எதிரான நிலைமை தொடர்பாக இங்கு ஆய்வு செய்யலாம்.
1. ஐ. நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட இரண்டு தீர்மானங்கள்.
2. இரண்டாம் தீர்மானத்தின்படி ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் திருமதி நவநீதம்பிள்ளை இலங்கை சென்று திரும்பினார். அவர் நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கை.
3. ஐ. நா. மனித உரிமை அமைப்பின் விஷேடப் பிரதிநிதி கலாநிதி சலோகா பெயானியின் இலங்கை விஜயம் தொட ர்பான அறிக்கை.
4. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இலங்கை சென்றிருந்தபோது வெளியான தகவல்கள் அடங்கிய அறிக்கை.
5. இரண்டு தீர்மானங்களையும் கொண்டு வந்த அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு குறித்த அறிக்கை அது மூன்றாவதாக பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் விபரம்.
6. சர்வதேசத்திடம் காலத்திற்கு காலம் இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகள் அவை நிறைவேற்றப்படாவிட்டால் அதற்குரிய காரணங்கள்.
7. போர்க்குற்றம் மற்றும் பொறுப்புக் கூறும் கடமையில் இலங்கை அரசின் நடவடிக்கைகள் எவை? ஏன் முன்னேற் றம் காணப்படவில்லை?
8. தமிழர்களின் பிரச்சினைக்கு ஏன் இன் னும் தீர்வு காணப்படவில்லை? வடமாகாண சபை தேர்தல் நடந்தாலும் அதன் செயற்பாடுகளுக்கு குறுக்கீடு செய்யும் முட்டுக்கட்டைகள் எவை?
9. போரின் போது பாதிக்கப்பட்ட அகதிகளின் நிலை? மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கும் அகதிகளின் நிலை சொந்த வீடுகளும் காணிகளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரம்.
10. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இரா ணுவத்தின் கட்டுப்பாடு குறித்த தகவல் கள்.
மேற்கண்ட முக்கிய பத்து விடயங்கள் பேரவை மாநாட்டின் போது ஆராயப்படவுள்ளதாக ஜெனீவா ஐ.நா. பணிமனை வட்டாரங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவை இலங்கை அரசுக்கு எதிரான பேரவையின் நடவடிக்கைக்கு சாதகமான விடயங்கள்.
அதேவேளையில், இம்முறை மாநாட் டின் போது புதிதாக பிரான்ஸ் நாட்டின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. அந்த அமைப்பு அது குறித்து முன்கூட்டியே சகல சர்வதேச ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளது. ஏ.எஸ்.எப். என அழைக்கப்படும். இந்நிறுவனம் சர்வதேச தொண்டர் அமைப்பாகும்.
தமது அமைப்பைச் சேர்ந்த பதினொரு பிரதிநிதிகள் மூதூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டமை குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடவுள்ளது. தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் அனைவரும் முழந்தாளிடப்பட்ட நிலையில் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்த விபரங்கள் சகல ஊடகங்களிலும் வெளியாகியமை. தெரிந்ததே.
அந்த அமைப்பின் பிரதிநிதி வெளிநாட்டு செய்தி ஊடகமொன்றுக்கு இது தொடர்பான விரிவான தகவல்களை வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கைப் படையினரே இந்தக்கொலைகளைச் செய்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. சாட்சிகளின் பாதுகாப்புக் கருதி அவர்களின் பெயர்களையோ அவர்களின் சாட்சியங்களையோ இங்கு வெளியிட முடியாத நிலையில் இருக்கின்றோம்.
ஆனால் சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறுமானால் அதன்போது சாட்சியங்களையும் ஆவணங்களையும் நாம் வெளியிடத் தயாராகவே இருக்கின்றோம்.
2006ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் மூதூ ரில் இடம்பெற்றது. அது முதல் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டோம் ஆனால் இலங்கை அரசு அவர்களைப் பிடிக்க எதுவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை அதனால் நாம் அங்கிருந்து இரண்டு ஆண்டுகளின் பின் மிக வேதனையுடன் நாடு திரும்பினோம்.
ஆனால், அந்த கொலைகள் தொடர்பாக பல ஆதாரங்கள் எமக்குக் கிடைத்துள்ளன. அவற்றை இலங்கை அரசிடம் கொடுத்தால் சாட்சிகளுக்கு ஆபத்து ஏற்படும் அதனால் தான் மனித உரிமைப் பேரவையிடம் இக் கொலை குறித்து விசாரணை செய்ய சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனக் கேட்கவுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மூதூர் கொலை தொடர்பாக விசாரணை செய்ய சர்வதேச விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் பிரான்ஸிலிருந்தும் வரவிருக்கின்றது.
அதேபோன்று திருகோணம லையில் ஐந்து மாணவர் கொலை தொடர்பாகவும் சர்வதேச விசாரணை கோரப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தற்போது நடைபெற்றுவரும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லாததினால் இந்தக் கோரிக்கை விடப்பட இருப்பதாக கொல்லப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொறுப்புக் கூறும் கடமையிலிருந்து இலங்கை அரசு தொடர்ந்தும் தவறுமேயானால் சர்வதேசத்தின் பொறுமையும் குறைந்து விடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் புதிய துணை ராஜாங்க அமைச்சர் திருமதி தேசாய் இத னைக் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசு தமது நல்லிணக்கத்தை தெரிவிக்காவிடில் சர்வதேச விசாரணைக் குழு தவிர்க்க முடியாததாகி விடும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று பிரித்தா னிய வெளிநாட்டமைச்சரும் தெரிவித்துள் ளார்.
மார்ச் மாதத்திற்குள் இலங்கை அரசு தமது பொறுப்புக் கூறும் கடமையை நிறைவேற்றும் என நாம் எதிர்பார்ப்பதாக வும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மனித உரிமை அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக இலங்கை அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கத் தயாராகவே உள்ளன.
ஆனால், இவர்கள் அனைவரும் புலிக ளின் ஆதரவாளர்கள் என இலங்கை அரசு குறிப்பிடுவதைப் பல ஊடகங்கள் கண்டித்துள்ளன. வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த விசாரணை தேவை என அவை சுட்டிக்காட்டியுள்ளன.
ஐ.நா. மனித உரிமைப்பேரவையில் இலங்கை அரசை இந்தியா ஆதரிக்குமா? என்ற கேள்வி பரவலாக பல ஊடகங்களில் எழுப்பப்பட்டுள்ளன. இலங்கை அரசு இந்தியாவின் ஆதரவைப் பெற பகீரத முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் அவை குறிப்பிடுகின்றன.
இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ இந்தியாவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஆனால் எந்தத் தகவலும் வெளிவரவில்லை.
ஜனாதிபதியின் விஷேட செய்தியுடன் அவர் சென்றார் என முதலில் குறிப்பிடப்பட்டது பின்பு பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக் ஷ இந்தியாவுக்குச் சென்று திரும்பினார்.
ஆனால் அவரின் விஜயத்தின் பின்பும் இலங்கை அரசுக்கு சாதகமான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் இந்தியா சில ஆலோசனைகளை இலங்கைக்கு வழங்கியிருப்பதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இலங்கை அரசுக்கு பகிரங்கமாக உதவி செய்ய இந்தியா தற்போதைய தேர்தல் சூழ்நிலையில் விரும்பவில்லை என்றே குறிப்பிடப்படுகின்றது.
இந்திய பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. ஆனால் ஜெனீவா ஐ. நா. மனித உரிமைப் பேரவை மாநாடு மார்ச் மாதம் நடைபெறுகின்றது.
எனவே, இலங்கை அரசுக்கு எவ்வகையிலாவது இந்தியா உதவி செய்தால் அது பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியை பாதிக்கலாம் என இந்திய ஊடகங்கள் பல குறிப்பிட்டுள்ளன. ஆனால் கடந்த முறையைப் போன்று இந்தியா இரகசியமாக உதவலாம் என தமிழ் நாட்டு ஊடகங்கள் பல தெரிவித்துள்ளன.
இந்தியாவின் முக்கிய அமைச்சரான ப.சிதம்பரம் தமிழ் நாட்டில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் கண்டனத்திற்கு இலக்காகியுள்ளன. அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாரிய பின்னடைவை தமிழ் நாட்டில் எதிர்கொள்ளும் என கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காக இது போன்ற கருத்துக்களை வெளியிடுவதாக மாற்றுக் கட்சியினரும் ஏனைய காங்கிரஸ் கட்சியினரும் தெரிவித்து வருகின்றனர். “இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது” என அமைச்சர் தெரிவித்த கருத்து இந்திய அரசாங்கத்தின் கருத்தல்ல போரை நிறுத்தி தமிழர்களை காப்பாற்றும் கடமையை தவற விட்ட இந்தியா இனிமேல் யாரைக்காப்பாற்றப் போகின்றதென பாரதிய ஜனதாக்கட்சி கேட்டுள்ளது.
ஜ.நா சர்வதேச மன்னிப்புச்சபையின் இந்தியப் பிரதிநிதி அனந்த பத்மநாதன் போர்க்குற்றம் புரிந்த இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவையெ னக் கோரும் அறிக்கை ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்களிடம் கையெழுத்தைப் பெற்றுள்ளார்.
அதனை அவர் மன்னிப்புச் சபைக்கூடாக ஜ.நா. மனித உரிமைப் பேரவையிடம் சமர்ப்பித்துள்ளார். அவர் இவ்வாரம் தமிழ்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வியொன்றை அளித்தார். இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் கொள்கை என்ன? இதனை இந்திய அரசாங்கம் முதலில் வெளியிட வேண்டும் என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். போரின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இந்தியா செயற்பட்டது.
இலங்கை எமது நட்பு நாடு என்பது இந்தியாவின் கொள்கை விளக்கம் அப்படியானால் இலங்கைத் தமிழர் தொடர்பாக இந்தியாவின் கொள்கை விளக்கம் என்ன? ஏனெனில் போரின் போது அவர்களைப் பாதுகாக்க இந்தியா எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அவர் இந்தச் செவ்வியின் போது குறிப்பிட்டார்.
கலாநிதி சிலேகா பெயான் ஐ. நா. மன்னிப்புச் சபையின் முக்கிய பதவியில் இருப்பவர் உள்நாட்டில் இடம்பெயர்ந் தோர் தொடர்பாக ஆராயும் அதிகாரி அவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இலங்கை வந்திருந்தார்.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைப் பேர வையில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானம் தொடர்பாகவே அவர் அழைக்கப்பட்டிருக்கிறார். இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பாக ஆராய்வதே அவரின் முக்கிய கடமையாக இருந்தது.
அவர் வலிகாமம் வடக்கு மக்கள் தங்கியுள்ள முகாமுக்குச் சென்றார். அங்கு முற்பகுதி ஓரளவு துப்பரவு செய்யப்பட்டு ஐந்து வீடுகளை அவர் பார்வையிட ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஆனால், அனுபவமிக்கவரான பெயானி ஏனைய வீடுகளையும் பார்வையிட வேண் டும் என்று கூறிய போது முதலில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது பின்பு அவராகவே எதிரே சென்ற போது தடுக்க முடிய வில்லை. அதன் பின்பே மக்கள் தமது துன்பங்களை அவரிடம் கண்ணீர் விட்டழுதவாறு தெரிவித்தனர். இச்சம்பவம் படங்களுடன் புலம் பெயர் தமிழ் ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன.
இராணுவம் தமது காணிகளைக் கைப்பற்றியதுடன் அங்கிருந்த வீடுகளையும் கோயில்களையும் பாடசாலைகளையும் அழித்து விட்டார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். ஐ. நா. அதிகாரி பெயானி முள்ளிவாய்க்கால் சென்ற போதும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொக்குத்தொடுவாய் கொக்கிளாய் பகு திகளில் தமிழருக்குச் சொந்தமான 2556 ஏக்கர் விவசாயக்காணிகள் அபகரிக்கப் பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட் டுள்ளார்கள் என்ற விபரம் பெயானிக்கு அறிவிக்கப்பட்டது.
முக்கியமாக ஒருவர் தமது காணி உறு தியை எடுத்துக்காட்டி அங்கு ஒரு புத்த பிக்கு குடியிருப்பதாக அவரின் கவனத் திற்குக் கொண்டு வரப்பட்டது. அந்தக் காணிக்குரிய பெறுமதியை வழங்கப்பட் டால் பெற்றுக்கொள்வீர்களா? என அவரி டம் அரசு அதிகாரி ஒருவர் கேட்டுள்ளார்.
அது எங்கள் பரம்பரைச் சொத்து எனக்கு அந்தக் காணி வேண்டும் என்று குடியிருப்பாளர் பதில் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல குறைபாடுகளை பெயானி குறிப்பெடுத் துள்ளார். பல தடைகளுக்கு மத்தியிலும் ஒருசில தமிழர்களே அவரைச் சந்திக்கக் கூடியதாக இருந்துள்ளது.
No comments
Post a Comment