Latest News

December 03, 2013

இந்தியாவைப் பிரிப்பதற்கு சதி ஸ்ரீலங்கா அரசின் கண்டுபிடிப்பு
by admin - 0

இந்­தி­யாவை பல கூறு­க­ளாகப் பிரிப்­ப­தற்கு பாரிய சதித்­திட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. உலகில் இரண்­டா­வது பெரிய சனத்­தொகை கொண்ட நாடான இந்­தியாவை பல கூறு­க­ளாகப் பிரிப்­பதில் மேற்கு நாடு­க­ளுக்கு பாரிய விருப்பம் உள்­ளது. இந்த நிலை­மையை புரிந்­து­கொண்டு இந்­தியா செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்று பிர­தமர் டி.எம். ஜய­ரட்ன தெரி­வித்தார்.
ரஷ்யா பல கூறு­க­ளாக பிரி்க்­கப்­பட்­ட­தைப்­போன்று இந்­தி­யா­விலும் பிரிவை மேற்­கொள்­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. இன ரீதி­யிலும் கலா­சார ரீதி­யிலும் இந்­தி­யாவில் பாரிய பிரி­வுகள் இருப்­பதால் இவ்­வாறு பல கூறு­க­ளாக இந்­தியா பிரிந்து விடு­வ­தற்­கான அபாயம் காணப்­ப­டு­கின்­றது. எனவே இது குறித்து இந்­தியா அவ­தா­னத்­து­டன செயற்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
இந்­திய பிர­தமர் மன்­மோ­கன்சிங் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு வடக்­குக்கு செல்­வது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். வடக்கில் ஏற்­பட்­டுள்ள அபி­வி­ருத்­தி­களை இந்­திய பிர­தமர் நேரில் பார்ப்­பது சிறந்­த­தாக அமையும். ஆனால் அவர் ஒரு தரப்பை மட்டும் சந்­திக்­காமல் அனைத்து தரப்­பி­ன­ரையும் சந்­திக்­க­வேண்டும் என்றும் பிர­தமர் கூறினார்.
பாரா­ளு­மன்ற கட்­டிட தொகு­தியில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாடு ஒன்றில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
பிர­தமர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது
தமி­ழ­கத்தின் அழுத்தம்
இந்­திய பிர­தமர் மன்­மோ­கன்சிங் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டு வடக்­குக்கு செல்­வது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு அவர் வருகை தர­வில்லை. தமி­ழக அர­சி­யல்­வா­தி­களின் அழுத்தம் கார­ண­தா­கவே அவர் அந்த முடிவை எடுத்தார். காரணம் தமி­ழக அர­சியல் கட்­சி­களின் ஒத்­து­ழைப்­பு­ட­னேயே இந்­திய மத்­திய அர­சா­ங்கம் ஆட்­சியில் உள்­ளது. எனவே தமி­ழக கட்­சிகளின் ஆத­ரவு காங்­கிரஸ் கட்­சிக்கு அவ­சி­ய­மாகும்.
தற்­போது பிர­தமர் வரலாம்
அந்­த­வ­கையில் இலங்­கைக்கு வேறு கார­ணங்­க­ளுக்­காக இந்­திய பிர­தமர் வருகை தரலாம். அந்­த­வ­கையில் தற்­போது வட மாகாண முதல்­வரின் அழைப்பில் இந்­திய பிர­தமர் வருவார் என கூறப்­ப­டு­கின்­றது. ஆனால் அது குறித்து அர­சாங்­கத்­துக்கு எதுவும் தெரி­யாது. எந்த விட­யமும் அர­சாங்­கத்­துக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை. எனவே இந்த விடயம் தொடர்பில் எனது தனிப்­பிட்ட கருத்தை இங்கு கூறு­கின்றேன்.
இருண்டு தரப்­பையும் பார்க்­க­வேண்டும்
தற்­போ­தைய நிலை­மையில் இந்­திய பிர­தமர் இலங்­கைக்கு வந்து வடக்­குக்கும் சென்று அங்கு மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள அபி­வி­ருத்­தி­களை நேரில் பார்ப்­பது சிறந்­த­தாக அமையும். கடந்த நான்கு வரு­டங்­களில் எவ்­வா­றான அபி­வ­ருத்­தி­களை இலங்கை அர­சாங்­கம் வடக்கில் முன்­னெ­டுத்­துள்­ளது என்­ப­தனை இந்­திய பிர­தமர் நேரில் பார்ப்­பது மகவும் சிறந்­த­தாக அமை யும்.
ஆனால் இந்­திய பிர­தமர் இலங்கை வந்தால் ஒரு தரப்பை மட்டும் சந்­திக்­காமல் அனைத்து தரப்­பி­ன­ரையும் சந்­திக்­க­வேண்டும். அனைத்து தரப்­பி­ன­ரையும் சந்­தித்து உண்மை நிலை­மையை புரிந்­து­கொள்­ள­வேண்டும். பிரிட்டன் பிர­தமர் டேவிட் கம­ரூனைப் போன்று ஒரு தரப்பை மட்டும் அதா­வது தமிழ்க் கூட்­ட­மைப்பை மட்டும் சந்­தித்து விட்டு சென்­று­வி­டக்­கூ­டாது.
தமிழ் மக்­க­ளுக்கு அநீதி இல்லை
யாழ்ப்­பா­ணத்தில் பாரிய அபி­வி­ருத்­திகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் வடக்கு கிழக்கில் 15 இலட்சம் தமிழ் மக்­களே வாழ்­கின்­றனர். ஆனால் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளியே 16 இலட்சம் தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர். அவ்­வாறு பார்க்­கும்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு வெளி­யேதான் அதி­க­ளவில் தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர். அவர்கள் எந்தப் பிரச்­சி­னையும் இன்றி வாழ்ந்­து­வ­ரு­கின்­றனர். எனது தொகு­தியில் 23 வீத­மானோர் தமிழ் மக்­க­ளாவர்.
இந்த நாட்டில் தமிழ் மக்­க­ளுக்கு எந்த அநீ­தியும் இழைக்­கப்­ப­ட­வில்லை. உயர் நீதி­மன்­றத்தில் தமிழ் மக்கள் உள்­ளனர். பொலிஸ் சேவையில் உள்­ளனர். சிங்­கள பகு­தி­களில் தமிழ் மக்கள் வாழ்­கின்­றனர்.
திரு­கோ­ண­மலை துறை­முகம்
இதே­வேளை பிரித்­தா­னி­யாவில் 1959 ஆம் ஆண்டு இந்­திய தலைவர் ஒருவர் நிகழ்த்­திய உரையில் இந்­தி­யாவின் பாது­காப்­பா­னது இலங்­கையின் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்­தி­லேயே தங்­கி­யுள்­ளது என்று கூறி­யி­ருந்தார். அந்­த­ள­வுக்கு இந்­தி­யாவின் கவனம் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தில் காணப்­பட்­டது. ஒரு­முறை திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தின் எண்ணெய் தாங்­கிகள் சில­வற்றை அமெ­ரிக்­கா­வுக்கு முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­தன வழங்க முற்­பட்­ட­போது அப்­போ­தைய இந்­திய பிர­தமர் ராஜிவ் காந்தி பல­வந்­த­மாக இலங்கை வந்து உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்டார். அந்த நிகழ்­வுக்கு அப்­போ­தைய பிர­தமர் பிரே­ம­தாச செல்­ல­வில்லை. அக்­கா­லத்தில் இந்­தியா வடக்கில் பாண்­க­ளையும் போட்­டது.
இந்­தி­யாவை பிரிக்க சதி
அந்­த­வ­கையில் தற்­போது இந்­தி­யாவை பல கூறு­க­ளாக பிரித்­து­விடும் சதி அபாயம் உள்­ளது. மேற்கு நாடுகள் இதில் விருப்­ப­மாக உள்­ளன. இந்­தி­யாவில் இன மற்றும் கலா­சார ரீதயில் பல பிரி­வுகள் உள்­ளன. அவற்றை பயன்­ப­டுத்தி இந்­தி­யாவை பிரிக்க முற்­ப­டலாம். மாபெரும் நாடாக இருந்த ரஷ்­யாவை 14 கூறு­க­ளாக பிரித்­தனர்.
அதே­போன்று உலகின் இரண்­டா­வது சனத்­தொ­கையை கொண்ட நாடான இந்­தி­யாவை பிரிக்க முயற்­சிக்­கப்­ப­டு­கின்­றது. மேற்கு நாடுகள் இதனை விரும்­பு­கின்­றன. எனவே இந்த விட­யத்தை இந்­தியா நன்­றாக புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தமிழ் நாட்டில் கோடிக் கணக்கில் மக்கள் உள்­ளனர். எனவே அங்கு பிரி­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான அபா­ய­க­ர­மான சாத்­தி­யங்கள் உள்­ளன.
பின் ஜன்னல் ஊடாக திருடன்
திருடன் பிர­தான கத­வு­களை திறந்­து­கொண்டு உள்ளே வர­மாட்டான். சமை­ய­ல­றையின் ஜன்னல் ஒன்றின் ஊடாக உள்ளே வந்து காரி­யத்தை சாதித்­து­விட்டு பிர­தான கதவின் ஊடாக வெளியே செல்வான். இந்த நிலை­மையை இந்­தியா புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது மிக அவ­சி­ய­மாகும். இந்­தி­யா­வுக்கு இந்த விடயம் நன்­றாக தெரியும். இந்­தி­யாவை பொறுத்­த­வரை இலங்கை சர்­வ­தேசம் மற்றும் தமி­ழகம் என அனைத்து தரப்­பி­னரும் தேவை­யாகும். அதனை நோக்­கா­கக்­கொண்டே இந்­தியா செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது.
பிரிட்டன் பிர­த­மரின் வடக்கு விஜயம்
பிரிட்டன் பிர­தமர் கமரூன் ஏன் வடக்­குக்கு சென்றார். பிரிட்­டனில் உள்ள தமிழ் மக்­களின் வாக்­கு­களை பெறவே அவர் சென்றார். இதில் மறைப்­ப­தற்கு ஒன்­று­மில்லை. எம்மைப் போன்­றுதான் அவரும் செயற்­பட்­டுள்ளார். கனடா ஏன் பொது­ந­ல­வாய மாநாட்­டுக்கு வர­வில்லை. கக­ன­டாவில் தமிழ் மக்கள் வாழ்­கின்ற பகு­தியே இருக்­கின்­றது. நான் அங்கு சென்று இதனை நேரில் பார்த்­துள்ளேன்.
எனவே அங்­குள்ள வாக்­கு­களை பெறும் நோக்­கி­லேயே கனடா பிர­தமர் வர­வில்லை. இதுதான் உண்மை. இவ்­வாறு வடக்கு மக்­களின் வாக்­கு­களை பெற நாம் ஏதா­வது செய்­யலாம். ஆனால் இன­வா­தத்தை வெளிப்­ப­டுத்­திக்­கொண்டு தமிழ்க் கூட்டமைப்பு வடக்கு மக்களின் வாக்குகளை பிடித்துக்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கு விவகாரம்
உலகில் இவ்வாறு பலமானவர்கள் சிறுபான்மை மற்றும் நடுத்தர மக்களை தமது தேவைகளுக்காக பயன்ப டுத்தி வருகின்றனர். மத்திய கிழக்கில் என்ன நடக்கின்றது. முன்னாள் அமெரிக்க ஜனா திபதி அமெரிக்க உளவு அமைப்பின் தவறான தகவலினால் ஈராக்கில் தாக் குதல் மேற்கொண்டதாக கூறியுள்ளார். அப்படியாயின் அங்கு அழிக்கப்பட்ட உயிர்களுக்கு யார் பொறுப்புக்கூறுவது? அவை குறித்து எங்கே விசாரணை? இலங் கையில் ஐந்து கொலைகள் நடந்ததாக விசாரணை கோரப்படுகின்றது. ஆனால் நூற்றுக்கணக்கான பிக்குமார்கள் கொலை செய்யப்பட்டமைக்கு விசாரணை இல்லையா?
« PREV
NEXT »

No comments