Latest News

December 21, 2013

நியமனம் பெற்ற பட்டதாரிகள் கடமை ஏற்க கொழும்பு செல்ல வேண்டியுள்ளதால் அவதி
by admin - 0

அரச சேவையில் நிரந்­தர நிய­மனம் வழங்­கப்­பட்ட பட்­ட­தா­ரிகள் கொழும்பில் உள்ள அமைச்­சுக்­க­ளுக்கும் தலைமை திணைக்­க­ளத்­துக்கும் சென்று பதவி ஏற்க வேண்டும் என திடீ­ரென அறி­விக்­கப்­பட்­டதால் தாம் பெரும் சிர­மங்­க­ளையும் மேல­திக செல­வி­னங்­க­ளையும் எதிர்­கொள்­வ­தாக கவலை தெரி­விக்­கின்­றனர்.
கடந்த ஒன்றரை வரு­டங்­க­ளுக்கு மேலாக 10 ஆயிரம் ரூபா கொடுப்­ப­ன­வுடன் கட­மை­ யாற்­றிய பட்­ட­தாரிப் பயி­லு­நர்­க­ளுக்கு அண்­மையில் நிரந்­தர நிய­ம­னங்கள் வழங்­க ப்­ப ட்­டன. இவர்கள் கொழும்­புக்கு சென்று அமைச்­சுக்­க­ளிலும் தலைமைத் திணைக்­க­ளத்­திலும் கட­மை­களைப் பொறுப்­பேற்க வேண்டும் என அறி­விக்­கப்­பட்­டதால் அவ ர்கள் கொழும்­புக்குச் சென்று கட­மை­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­வதில் பல சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.
மாவட்ட ரீதியில் உள்ள திணைக்­க­ளத்தில் இவ்­வ­ளவு காலமும் கட­மை­பு­ரிந்­த­தோடு தமது கொடுப்­ப­ன­வு­க­ளையும் பிர­தேச செய­ல­கங்­களில் பெற்று வந்­தனர்.
இந்நிலையில் நியமனம் பெற்றவர்களில் பெரும்­பா­லானோர் பெண்­க­ளாக இருப்­பதால் கொழும்­புக்குச் செல்­லும்­போது துணைக்கு ஒரு­வரை அழைத்துச் செல்ல வேண்­டிய நிலை மற்றும் கொழும்பில் இரவு தங்­க­வேண்­டிய நிலை, பத­வி­யேற்க வேண்­டிய அமைச்சு மற்றும் திணைக்­க ளம், தலைமைக் காரி­யா­ல­யத்தைக் கண்­டு­கொ ள்ள அலை­ய­வேண்­டிய இருப்­ப­தா­கவும் இத னால் தமக்கும் பெரும் பண­வி­ர­யமும் சிர மும் ஏற்­ப­டு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.
மாவட்ட ரீதி­யி­லி­ருந்து கொழும்­புக் குச் செல்ல வேண்­டி நிலை தொடர்­பாக மாவட்டம், பிர­தே­சங்­க­ளுக்குப் பொறுப் ­பான உயர் அதி­கா­ரிகள் கவனம் செலுத் தாமை தொடர்பாகவும் தங்களது பாதிப் புக்கள் தொடர்பாக அரசியல் தலைவர் களும் கவனம் செலுத்தாமல் இருப்பது தொடர்பாகவும் நியமனம் பெற்ற பட்டதா ரிகளும் அவர்களின் உறவினர்களும் விச னம் தெரிவிக்கின்றனர்.
« PREV
NEXT »

No comments