Latest News

December 04, 2013

எட்­டம்­ப­கஸ்­கட சிறுவர் துஷ்­பி­ர­யோக வழக்கு: சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரி­களின் செயற்­பா­டுகள் தொடர்பில் நீதி­மன்றம் அதி­ருப்தி
by admin - 0

எட்­டம்­ப­கஸ்­கட சிறுவர் இல்­லத்து சிறு­வர்கள் மீதான துன்­பு­றுத்தல் மற்றும் துஷ்பி­ர­யோகம் தொடர்­பான தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரி­களின் விசா­ர­ணை­களில் அதி­ருப்தி தெரி­வித்­துள்ள நீதி­மன்றம், அவர்­க­ளு­டைய செயற்­பா­டுகள் தொடர்­பான நேற்­றைய நீதி­மன்ற விசா­ரணை அறிக்­கை­களை அதி­கார சபையின் தலை­விக்கு அனுப்பி வைக்­கு­மாறு வவு­னியா மாவட்ட நீதிவான் வே.இரா­ம­க­மலன் நீதி­மன்றப் பதி­வா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார். 
இது தொடர்பில் நீதி­மன்­றத்தில் அவர் தெரி­வித்­த­தா­வது: 
எட்­டம்­ப­கஸ்­கட செத்­செ­வன சிறுவர் இல்­லத்தில் சேர்க்­கப்­பட்­டி­ருந்த தனது மகன் அங்கு பாலியல் துஷ்பிர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருந்தார் என்று தாயார் ஒருவர் வவு­னியா பொலிஸ் நிலை­யத்தில் செய்­தி­ருந்த முறைப்­பாட்­டை­ய­டுத்து, அவ­ரு­டைய வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்­தி­ருந்த பொலிசார், சந்­தேக நபரைக் கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுத்­தி­ருந்த நேரம். அந்த விசா­ர­ணை­களை சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரிகள் பொறுப்­பேற்று, சம்­பந்­தப்­பட்ட பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் வாக்­கு­மூல அறிக்­கை­யையும், சந்­தேக நபரைக் கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருந்­தனர். 
ஆனால் நீதி­மன்­றத்­திற்கு உறு­தி­ய­ளித்த வகையில் அவர்கள் நடந்து கொள்­ள­வில்லை. அத்­துடன், சந்­தேக நபரை அவர்கள் கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­ய­வு­மில்லை. ஆனால், இந்த வழக்கு தொடர்­பாக சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெறு­வ­தற்­காக ஆவ­ணங்­களை அங்கு அனுப்பி வைத்­துள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ளனர். 
சிறு­வர்­களைப் பாது­காக்க வேண்­டிய பொறுப்­பு­டைய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரிகள், பிழை­யான முன்­னு­தா­ர­ண­மாக, பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­களை விசா­ரணை செய்து அந்த அறிக்­கையை நீதி­மன்­றத்­திற்கு சமர்ப்­பிக்­கா­மலும், சந்­தேக நபரைக் கைது செய்து நீதி­மன்­றத்தில் நிறுத்­தா­மலும் வழக்கு விசா­ரணை தொடர்­பாக சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெறு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளார்கள். 
இவ்­வாறு தெரி­வித்த நீதி­பதி இரா­ம­க­மலன் தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரி­களின் இந்த நட­வ­டிக்­கையை அந்த சபையின் தலைவி அறிந்து கொள்ளும் வகையில் நீதி­மன்ற விசா­ரணை அறிக்­கையை அவ­ருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நீதி­மன்றப் பதி­வா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளார். 
இதே­வேளை, இந்த வழக்கின் விசா­ர­ணைகள் முடி­வ­டைந்­துள்­ள­தாக தேசிய சிறுவர் பாது­காப்பு அதி­கார சபை­யினர் நீதி­மன்­றத்தில் அறிக்கை சமர்ப்­பித்­துள்ள போதிலும், நேற்று நடை­பெற்ற விசா­ர­ணை­களில் இந்த வழக்கு தொடர்­பான விசா­ர­ணைகள் முடி­வ­டை­ய­வில்லை என்று தெரி­ய­வந்­துள்­ள­தாகத் தெரி­வித்து, சந்­தேக நப­ரா­கிய எட்­டம்­ப­கஸ்­கட பௌத்த பிக்­கு­வை­யும், இரண்­டா­வது சந்­தேக நப­ராக நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்த அவ­ரு­டைய உத­வி­யாளர் ஒரு­வ­ரையும் எதிர்­வரும் 17 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார். 
எட்­டம்­ப­கஸ்­கட செத்­செ­வன சிறுவர் இல்­லத்தின் நிர்­வா­கி­யான கல்­யாண திஸ்ஸ தேரர் சார்பில் அனு­ரா­த­ர­பு­ரத்தில் இருந்து வந்து ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணிகள் இந்த வழக்கு தொடர்­பான முடிந்­துள்­ளது, சந்­தேக நப­ரு­டைய இல்­லத்தில் இருந்த சிறு­வர்கள் எல்­லோரும் களுத்­து­றையில் பாது­காப்­பாக வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தனால் சாட்­சி­களை அவர் குறுக்­கீடு செய்­ய­மு­டி­யாது எனவே, அவரை பிணையில் செல்ல அனு­ம­திக்க வேண்டும் என்று நீதி­மன்­றத்தில் கோரினர். 
ஆயினும், இந்த வழக்கு தொடர்பில் மேலும் பல சிறு­வர்கள் சிறுவர் நன்­ன­டத்தை அதி­கா­ரி­க­ளுக்கு முறை­யிட்­டுள்­ளனர். அந்த விசா­ர­ணைகள் இன்னும் முடி­வ­டை­ய­வில்லை. இது தொடர்பில் இன்னும் சில சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­ப­ட­வுள்­ளார்கள். எட்­டம்­ப­கஸ்­கட சிறுவர் இல்­லத்­தில இருந்­த­போது, பல­த­ரப்­பட்ட வழி­களில் அந்த சிறு­வர்கள் துன்­பு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். வேலைகள் செய்­யு­மாறு நிர்ப்­பந்­திக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். பிர­தான சந்­தேக நப­ரி­னாலும், அவ­ரு­டைய உதவியாளர்களினாலும் பாலியல்
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக் கின்றார்கள். இந்த நிலையில் விசாரணை கள்
முற்றுப் பெறாமல் சந்தேக நபருக்குப் பிணை வழங்கக் கூடாது என பாதிக்கப்பட் டுள்ள சிறுவர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகளான கே.எஸ்.ரட்னவேல், இராஜகுலேந்திரன், புவிதரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதனையடுத்து சந்தேக நபராகிய மதகுருவையும் மற்றவரை யும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
« PREV
NEXT »

No comments