Latest News

November 12, 2013

வைகோ கைது
by admin - 0

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துக்கொள்ளாத நிலையில், இந்த மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்கவேண்டுமென வலியுறுத்தி தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன.    போராட்டங்களின் ஒரு பகுதியாக கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.   இந்த நிலையில், மதுரையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட ம.தி.மு.க. தொண்டர்கள் 300 பேர் மதுரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மறியல் காரணமாக சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது.    மேலும், கோவையில் முழு கடையடைப்பு போராட்டத்தையொட்டி  டேக்ட், டாப்மா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பதினைந்தாயிரம் தொழிற்கூடங்கள் அடைக்கப்பட்டுள்ளன. இலங்கை பொதுநலவாய மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி தொழிலாளர்களுடன், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற் கூட்டமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.    புதுவையில் 15.000க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அரசுப் பேருந்துகள் பொலிஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருவதாக தமிழக செய்தி தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
« PREV
NEXT »

No comments