Latest News

November 13, 2013

இதற்கும் பின் சிங்களவனுடன் இணைந்து வாழ தமிழன் விரும்புவானா இசைப்பிரியாவின் தாயின் கதறல்.
by admin - 0

தமிழீழ ன் தொலைக்காட்சி பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய இசைப்பிரியா
சிங்கள காடையர்களின் வன்மத்துக்கு உள்ளாகி மரணமடைந்தார் .




அவர் கடைசி நிமிடங்களில் இராணுவத்தினரின் மத்தியில் நாதியற்று நின்ற காட்சி சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை இராணுவத்தின் அத்துமீறல்களை புலம் போட்டு காட்டியுள்ளது . இறுதிக் கட்ட போரில் இசைப்பிரியா போன்று எத்தனையோ பெண்கள் இராணுவத்தின் பிடியில் சிக்குண்டு மடிந்து போயினர் .
அக் காணொளிகளையெல்லாம் வெளியிட நேரிடின் இலங்கை அரசின் ஈவு இரக்கமற்ற தன்மையை கண்டு சர்வதேசமே கண்ணீர் சிந்த வேண்டிய நிலை வரும் . போரால் சொந்தமிழந்து , சொத்திழந்து நின்றது போக எம் பெண்கள் மானமும் இழந்து நிற்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர் . அவற்றையெல்லாம் பறை சாற்றும் முகமாக வெளிவந்த இசைப்பிரியாவின் காணொளி தீர்வொன்றை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையில் எம்மவர்கள் விடிவுக்காய் காத்துக்கொண்டுள்ளனர் .

பத்து மாதம் சுமந்த தாய் காணக்கூடாத காட்சியொன்றை இசைப்பிரியாவின் தாய் கண்டுள்ளார் . தன் மகளுக்கு நேர்ந்த கதியை மனதில் உள்ள சோகங்களை சனல் 4 இடம் பகிர்ந்து கொண்டுள்ளார் . காணொளிகள் கீழே
மரணத்தின் பின்னும் தன்னினத்தின் விடிவுக்காய் பாடுபடும் வீர மங்கையின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போம் .

« PREV
NEXT »

No comments