Latest News

November 17, 2013

பங்குத் தந்தை பொலிசாரினால் தாக்கப்பட்டதைக் கண்டித்து போராட்டம்
by admin - 0

உரும்பிராய் சென்மைக்கல் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம் பெற்ற பூசையைத் தொடர்ந்து பங்கு மக்களினால் பங்குத் தந்தை உட்பட ஏனைய அருட்தந்தைகளும் கடந்த 15 ம் திகதி யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் முன்னாள் வைத்து பொலிசாரினால் தாக்கப்பட்டதைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி செபமாலை வழிபாட்டில் ஈடுபட்டார்கள்.
உரும்பிராய் சென்மைக்கல் தேவாயலத்தின் பங்க மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மெழுவார்த்தி செபமாலை வழிபாட்டில் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். மெழுகுவர்த்தி வழிபாட்டில் ஈடுபட்ட மக்கள் பாதாதைகளையும் தாங்கி இருந்தார்கள். பாதாதைகளில் எமக்கு நீதி வேண்டும். எங்கள் குருவே எமக்கு பாதுகாப்பு பங்கு தந்தை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற சுலோகங்களையும தாங்கி இருந்தார்கள்.




« PREV
NEXT »

No comments