Latest News

November 16, 2013

கண்ணீர் விட்டழுத சனல்-4 ஊடகவியலாளர்
by admin - 0

யாழ்ப்பாணம் வருகை தந்த சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களின் துன்பங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
இன்று யாழ்பாணம் வருகை தந்த பிரிட்டன் பிரதமருடன் சனல் 4 ஊடகவியலாளர்களும் வருகை தந்திருந்தனர்.
காணாமல் போனவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினைப் பார்வையிட்ட சனல் 4 ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களை ஆரத்தழுவி கண்ணீர் விட்டழுதுள்ளார்.
பிரிட்டன் பிரதமரைச் சந்திப்பதற்காக வருகை தந்திருந்த மக்களை பொலிஸார் தடுத்ததையடுத்து அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு உடனடியாக பிரிட்டன் பிரதமரின் உதவியாளரிடம் அந்த  கோரிக்கையை சமர்பித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments