2009 ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற்கட்சியின் தலைவர் மிலிபேண்ட் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மாத நடுப் பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும், அவருக்கும் இடையில் லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை கூறினார். இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய விடயங்களை காரணம் காட்டி இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொழிற்கட்சி இருந்து வருவதை பிரித்தானிய தமிழர் பேரவை வரவேற்றுள்ளது. அதேவேளை இலங்கையின் நல்லிணக்கம்? என்ற தலைப்பிலான பேரவையின் புதிய அறிக்கையின் பிரதியொன்றும் மிலிபேண்டிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு, பொருளாதார அடக்குமுறை, மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் தற்பொழுதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மரணங்கள், காணாமல் போனவர்களின் விடயங்கள், காயமடைந்தவர்கள், விதவைகளின் நிலைமைகள் தொடர்பில் மிலிபேண்ட் அதிர்ச்சி வெளிட்டுள்ளார். தனது சகாக்களுடன் இந்த விடயங்கள் குறித்து பகிர்ந்து நம்பிக்கையூட்டும் உரிய முனைப்புகளை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் கார்டியன் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்த தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் வெளிவிவகார அமைச்சருமான டக்ளஸ் அலெக்சாண்டர் பிரித்தானிய பிரதமர் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
HOT NEWS
Jaffna
kavin
news
Really
SPORTS
study
Tamileelam
TGTE
video
WTRRC
அறிவித்தல்
அறிவித்தல்கள்
அறிவியல்
இது நம்மவர்
இந்தியா
இயற்கை
இலங்கை
ஈழத்து துரோணர்
உலகம்
உறவுகள்
கணினி
கல்வி
கவிதை
குறும்படம்
கோவில்
கோவில்கள்
சமையல்
சரவணை மைந்தன்
சினிமா
தமிழகம்
தமிழர் வரலாறு
தமிழ் வளர்ப்போம்
தமிழ்நாடு
தற்பாதுகாப்பு
திருகோணமலை
தேச விடுதலை வீரர்கள்
தேர்தல்
நிகழ்வு
நிகழ்வுகள்
படங்கள்
பெண்ணியம்
பொ.ஜெயச்சந்திரன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்கள்
மருத்துவம்
மாற்றம் வருமா ?
வடமாகாண தேர்தல்
வல்வை அகலினியன்
விபத்து
வியப்பு
விவசாயம்
Latest News
Social Buttons
Dropdown Menu
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments
Post a Comment