Latest News

November 22, 2013

பிரித்­தா­னியப் பிர­த­மரின் கருத்து ஏற்­ப­டுத்­தி­யுள்ள பெரும் சர்ச்சை
by admin - 0

எதிர்­வரும் மார்ச் மாதத்­திற்குள் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை மேற்­கொள்­ளா­விடின் ஐ.நா. மனித உரிமைப் பேர­வை­யுடன் இணைந்து சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என்று பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன் தெரி­வித்த கருத்­தா­னது இலங்­கையில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.
பொது­ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக இலங்கை வந்த டேவிட் கமரூன், யாழ்ப்­பா­ணத்­திற்கும் விஜயம் செய்து வட­மா­காண முத­ல­மைச்சர் சீ.வி. விக்­கி­னேஸ்­வரன், தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகி­யோரை சந்­தித்து பேசி­யி­ருந்தார். யாழ்ப்­பா­ணத்­திற்கு பிரித்­தா­னியப் பிர­தமர் விஜயம் செய்த வேளையில் காணாமல் போன­வர்­க­ளது உற­வி­னர்­களும் வலி­காமம் வடக்கில் காணி சுவீ­க­ரிப்­பினால் பாதிக்­கப்­பட்ட மக்­களும் போராட்­டங்­களில் ஈடு­பட்­டனர். இந்த விட­யங்கள் குறித்தும் கமரூன் அறிந்­தி­ருந்தார்.
இத­னை­விட, சுன்­னா­கத்­தி­லுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்­கி­யுள்ள அக­தி­மு­கா­முக்கும் சென்று இடம்பெயர்ந்த மக்­களின் கஷ்ட துன்­பங்­க­ளையும் நேரில் பார்­வை­யிட்­டி­ருந்தார். மறுநாள் பொது ­ந­ல­வாய மாநாடு நடை­பெற்ற கொழும்பு – பண்­ட­ரா­நா­யக்க ஞாபகார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் செய்­தி­யாளர் மாநாட்­டினை நடத்­திய பிரித்­தா­னியப் பிர­தமர் இலங்­கையின் இறு­திக்­கட்ட யுத்­தத்தில் இடம்பெற்­றுள்­ள­தாக கூறப்­படும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து சுயா­தீன விசா­ர­ணையை அடுத்த வருடம் மார்ச் மாதத்­திற்குள் நிறைவுசெய்­யா­விட்டால் சர்­வ­தேச சுயா­தீன விசா­ர­ணையைக் கோருவோம் என்று அறி­வித்­தி­ருந்தார்.
ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க் ஷவை சந்­தித்­துப் ­பே­சிய பிரித்­தா­னியப் பிர­தமர் இந்த விடயம் தொடர்பில் நேர­டி­யா­கவே கருத்து தெரி­வித்­தி­ருந்தார். ஜனா­தி­ப­தி­யையும் சந்­தித்து சுயா­தீன விசா­ர­ணையை வலி­யு­றுத்­திய கமரூன் நாடு திரும்­பிய பின்னர் அந்­நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் இலங்கை விஜயம் தொடர்பில் விசேட உரை­யாற்­றினார். இந்த உரை­யின்­போது இலங்­கையில் நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்குத் தேவை­யான செயற்­பா­டுகள் குறித்தும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து இலங்கை அர­சாங்­கத்­தினால் நடத்­தப்­பட்­டுள்ள விசா­ர­ணை­களில் அதி­க­மா­னவை இரா­ணு­வத்தின் தலை­மை­யி­லேயே இடம்பெற்­றுள்­ள­மை­யினால் அவை முற்­று­மு­ழு­தாக சுயா­தீனத்தன்மை கொண்­ட­வை­யாக அமை­ய­வில்லை. இதனால், மார்ச் மாதத்­திற்குள் சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும். இல்­லையேல், சர்­வ­தேச விசா­ர­ணைக்குக் கோரவேண்­டிய நிலை ஏற்­படும் என்று தெரி­வித்­துள்ளார்.
இந்த விடயம் குறித்து இலங்கை ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ­வு­ட­னான சந்­திப்பில் வலி­யு­றுத்­தினேன். இவ்­ வி­வ­கா­ரத்தை கையாள்­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு போதிய கால அவ­காசம் தேவைப்­ப­டு­வ­தா­கவும், சர்­வ­தேச விசா­ரணை ஒன்­றுக்கு இட­ம­ளிக்க முடி­யாது என்றும் அவர் என்­னிடம் தெரி­வித்தார். ஆயினும் புதி­தாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ள வட­மா­காண முத­ல­மைச்­ச­ருடன் பங்­கா­ளித்­து­வப் ­பாங்கில் இணைந்து பணி­யாற்­று­வதன் மூலம் வெற்­றி­க­ர­மான – செழு­மை­மிக்க எதிர்­கா­ல­மொன்றைக் கட்­டி­யெ­ழுப்­பலாம் என்­ப­தையும் நான் இலங்கை ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்­தினேன் எனவும் கமரூன், பிரித்­தா­னியப் பாரா­ளு­மன்­றத்தில் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.
பிரித்­தா­னியப் பிர­த­மரின் காலவரை­ய­றையும் சர்­வ­தேச விசா­ர­ணைக்­கான கோரிக்­கையும் இலங்­கையில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன. கொழும்பில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் பிரித்­தா­னியப் பிர­தமர் கருத்துத் தெரி­வித்த பின்னர் மறுநாள் இடம் பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளித்த ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க் ஷ, நல்­லி­ணக்­கத்­திற்கு சர்­வ­தேசம் கால­வ­ரை­யறை வழங்­கு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.
மனித உரி­மைகள் விவ­காரம் குறித்த விட­யத்தில் இலங்­கை­யையும் அர­சாங்­கத்­தையும் மூலை முடுக்­­கொன்­றுக்குத் தள்­ளி­விட முயற்­சிப்­பதை விடுத்து, நீதி நியா­யத்தை கடைப்­பி­டிப்­ப­வர்­க­ளாக சர்­வ­தேச சமூ­கத்­தினர் செயற்­ப­ட­வேண்டும் என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருந்தார். பிரித்­தா­னியப் பிர­த­மரின் சர்­வ­தேச விசா­ரணை தொடர்­பான கருத்­தையும் அவ­ரது யாழ். விஜ­யத்­தையும் சிங்­கள இன­வாதக் கட்­சி­களும் அமைப்­புக்­களும் கடு­மை­யாக சாடி­யுள்­ளன.
பொது­ ந­ல­வாய அரச தலை­வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் அனு­ப­வித்து, மாநாட்­டி­னு­டைய நிறை­வேற்றுக் கூட்­டத்­தொடர் முடி­வ­டை­வ­தற்கு முன்பே பிரித்­தா­னியப் பிர­தமர் டேவிட் கமரூன் வடக்­கிற்குப் பய­ணித்­த­மை­யா­னது “உண்­ட­வீட்­டுக்கு இரண்­டகம் செய்யும் செய­லாகும்” என்று தேசிய சுதந்­திர முன்­னணி குற்றம் சாட்­டி­யுள்­ளது. நாட்டில் சமா­தானம் நிலை­கொண்­டுள்ள இத்­ த­ரு­ணத்தில் எமது நாட்டை இன­ரீ­தி­யாகப் பிள­வு­ப­டுத்தி அவர்­களின் தேவைக்கு ஏற்றால் போல் இன­வா­தத்தை போஷிக்கும் வகை­யி­லேயே டேவிட் கம­ரூனின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன என்றும் அந்தக் கட்சி குற்றம் சுமத்­தி­யுள்­ளது.
பிரித்­தா­னியப் பிர­தமர் இரா­ஜ­தந்­திர நெறி­மு­றை­களை மீறி­விட்­ட­தாக இலங்கை அர­சாங்­கமும் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது. இலங்கை அர­சாங்க வட்­டா­ரங்­களை மேற்கோள் காட்டி பி.பி.சி. வெளியிட்­டுள்ள செய்­தியில் இடம் பெயர்ந்தோர் முகா­முக்கு டேவிட் கமரூன் சென்­றி­ருந்­த­போது பிர­தான உள்ளூர் தமிழ் அதி­கா­ரியை டேவிட் கமரூன் ஓரங்­கட்­டி­விட்டார். தேசிய வரு­கைப்­ப­தி­வேட்டில் ஒப்­ப­மிட அவர் மறுத்­த­துடன் வர­வேற்பு நட­னத்­தையும் ஏற்­றுக்­கொள்ள மறுத்­து­விட்டார் என்று இலங்கை அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டி­ய­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
பிரித்­தா­னியப் பிர­த­மரின் கருத்துத் தொடர்பில் ஜே.வி.பி.யும் தமது கட்­சியின் நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கி­றது. இலங்­கையின் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று கூறு­வ­தற்கு பிரித்­தா­னி­யா­வுக்கோ, டேவிட் ­க­ம­ரூ­னுக்கோ எந்­த­வித உரிமையும் இல்லை. டேவிட் கமரூன் இவ்­வாறு கூறு­வ­தற்கு இலங்கை ஒன்றும் பிரித்­தா­னி­யாவின் கால­னித்­துவ நாடு அல்ல. ஆனாலும், பிரித்­தா­னியப் பிர­தமர் இவ்­வா­றான கூற்றை வெளியி­டு­வ­தற்கு அர­சாங்­கமே வழி­ச­மைத்­தது என ஜே.வி.பி. யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜித ஹேரத் கூறி­யுள்ளார்.
யுத்தம் முடி­வ­டைந்­ததும் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மித்து உள்­ளக விசா­ர­ணையை மேற்­கொண்­டி­ருந்தால் இந்த நிலைமை ஏற்­பட்­டி­ருக்­காது. இதனை நாம் அன்று கூறி­ய­போது அர­சாங்கம் கணக்­கி­லெ­டுக்­க­வில்லை எனவும் ஜே.வி.பி. தெரி­வித்­துள்­ளது.
இலங்­கையில் யுத்­தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயா­தீன விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரைகள் முழு­மை­யாக அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டு­மென்றும் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரி­மைப்­பே­ர­வையில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஒழுங்­கான செயற்­றிட்­டங்கள் ஒதுக்­கப்­ப­டா­மை­யினால் 2013 ஆம் ஆண்டும் இதே தீர்­மானம் மீண்டும் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளிலும், இரா­ணு­வத்­தி­ன­ருடன் சம்­பந்­தப்­பட்ட மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்று கூறப்­பட்­டி­ருந்­தது. இதற்­கி­ணங்க , இரா­ணுவ அதி­கா­ரி­களைக் கொண்ட குழு­வொன்று குறிப்­பிட்ட சில சம்­ப­வங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தி­யி­ருந்­தது. இந்த விசா­ர­ணையை அடுத்து வெளியி­டப்­பட்ட அறிக்­கையில், மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் இராணுவத்தினர் தொடர்புபடவில்லையென்றும், நாட்டில் காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய விசாரணையும் அறிக்கையுமே சர்வதேச சமூகத்தின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தான் இராணுவத்தினரின் விசாரணைகளில் சுயாதீனத் தன்மை இல்லை என்றும், சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனின் கருத்துக்களும் இதனையே பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.

எனவே, எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையினை தடுக்கவேண்டுமானால் அரசாங்கம் பொறுப்புக் கூறும் விடயத்தில் உரிய வகையில் செயற்பட வேண்டும். இதனை விடுத்து கமரூன் மீதோ, அல்லது சர்வதேசத் தலைவர்கள் மீதோ குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதால் எந்தவித பயனும் ஏற்படப் போவதில்லை.
« PREV
NEXT »

No comments